“தினமும் பட்டர்ஃபிளை யோகா செய்யுங்க..!” – கலர்ஃபுல் ஆரோக்கிய லைஃபை பெறுங்க..!!

பன்நெடும் காலமாக பயன்பாட்டில் இருந்து வந்த எந்த யோகா கலை தற்போது மீண்டும் புத்துணர்வோடும் விழிப்புணர்வோடும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று உள்ளது.

தினமும் யோகா செயல்வது மூலம் எண்ணற்ற நன்மைகளை பெறுவதோடு உடலில் நோய்கள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளவும் முடியும் என்பதை புரிந்து கொண்டு தற்போது மக்கள் அனைவரும் இந்த யோகாவை தங்களது அன்றாட வாழ்வில் மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வரிசையில் பெண்களுக்கான பட்டாம்பூச்சி யோகாவை செய்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. இந்த யோகாவின் மூலம் என்னென்ன நன்மைகளை பெண்கள் அடைய முடியும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பட்டர்பிளை யோகா மற்றும் நன்மைகள்

👌பட்டர்பிளை யோகா செய்வதின் மூலம் பெண்களின் இறுக்கமான இடுப்பு பகுதி எளிதாக தளர்ந்து விடும். மேலும் இது நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்தி உங்கள் மனதில் ஏற்படக்கூடிய பதட்டத்தை குறைப்பதால் இதனை நீங்கள் தினமும் செய்யலாம்.

👌இந்த யோகாவை செய்வதின் மூலம் உங்கள் உட்புற தொடைகள், இடுப்பு, முழங்கால் நல்ல முயற்சி கிடைக்கும் இடுப்பு பகுதியில் நெகிழ்வு தன்மையை அதிகளவு ஏற்படுத்தும்.

👌 மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அசௌவுரியம் மற்றும் வலிகளை குறைக்க  பட்டாம்பூச்சி யோகா மிகச்சிறந்த ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

👌 பெண்கள் கர்ப்ப காலத்தில் மருத்துவரின் ஆலோசனை மற்றும் நிபுணரின் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து இந்த யோகாவை செய்வதின் மூலம் உங்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படும்.

👌 இந்த பட்டாம்பூச்சி யோகாவை செய்வதின் மூலம் கழுத்து, தலை மற்றும் முதுகில் இருக்கும் குறைபாடுகள் நீங்கி தலை வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் உங்களை மன அழுத்தத்தில் இருந்து காப்பாற்றக்கூடிய செயலை செய்கிறது.

👌 இந்த யோகாவை நீங்கள் தொடர்ந்து செய்வதின் மூலம் உடலில் இருக்கக்கூடிய நச்சுகள் வெளியேறி உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

👌 கருப்பை மற்றும் செரிமான மண்டலத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய அற்புத சக்தி படைத்தது தான் இந்த பட்டர்பிளை யோகா.

 பட்டர்பிளை யோகா செய்யும் முறை

முதலில் நீங்கள் முழங்கால்களை மடக்கி கால் பாதங்கள் ஒன்றோடு ஒன்று தொடும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.அதன் பின் உங்கள் கைகள் உங்கள் கைகளால் கால்களை இறுக்கமாக பிடித்துக் கொள்ளவும்.

 அதன்பின் கால்களின் வெளிப்புறம் தொடை தரையை தொடுமாறு உங்கள் கால்களை முடிந்தவரை இடுப்புப் பகுதிக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டும் முதுகெலும்பை நேராக வளைத்து தொடைகளை பட்டாம் பூச்சியின் இறகுகள் போல மேலும் மேலும் பறக்க வேண்டும்.

 இவ்வாறு செய்வதின் மூலம் உங்கள் முழங்கால்கள் தரையில் தொடும் தொடர்ந்து ஒரு நிமிடத்திலிருந்து கால் மணி நேரம் இதை படிப்படியாக அதிகரித்து செய்யலாம். இந்த முறையில் நீங்கள் இந்த யோகாவை செய்வதின் மூலம் குறிப்பாக பெண்களுக்கு பல பலன்கள் கிடைக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …