எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த முருங்கைக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு எண்ணற்ற பிரச்சனைகள் தீரும். அது மட்டுமல்லாமல் உடலுக்குத் தேவையான அனைத்து வித சத்துக்களை அள்ளித்தரும்.
எனவே முருங்கைக் கீரையை நீங்கள் தினமும் உணவில் உட்கொள்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி எந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
முருங்கைக் கீரையில் உண்பதால் ஏற்படும் நன்மைகள்
பிரஷாக இருக்கும் முருங்கை கீரையோடு உப்பு போட்டு வேகவைத்து சாப்பிட்டாலே உங்களுக்கு மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் குறிப்பாக மூட்டு வலி அனைத்தும் குணமாகும்.
இந்த முருங்கைக் கீரையோடு சிறிதளவு மஞ்சள் பூண்டு சேர்த்து நீங்கள் வேக வைத்தோ அல்லது சூப் செய்தோ குடிப்பதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் வாயு கோளாறுகள் நீங்கும். செரிமானம் அதிகரிக்கும் மலச்சிக்கல் நீங்கும்.
முருங்கைக் கீரையில் அதிக அளவு வைட்டமின் ஏ சத்து இருப்பதால் இது உங்கள் கண் பார்வையை மேம்படுத்தி தருவதோடு கண் சம்பந்தமான உபாதைகளுக்கு மிகச்சிறந்த தீர்வைத் தரும்.
முருங்கைக் கீரை இலையை இளம் வெயிலில் உலர்த்தி பொடி செய்து வீக்கங்கள் இருக்கும் பகுதியில் பற்று போட்டு வர வீக்கம் குணமாகும்.
முருங்கைக் கீரையுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு ரத்த சோகை இருந்தால் அந்த ரத்த சோகையை நோய் குணமாகும். அதுமட்டுமில்லாமல் தேவையான இரும்புச்சத்தை உங்களுக்கு அள்ளித் தரக்கூடிய ஆற்றல் எந்த முருங்கை கீரைக்கு உள்ளது.
முருங்கைக் கீரையை நீங்கள் அப்படியே சாறு எடுத்து சாப்பிடுவதின் மூலம் குடலில் இருக்கும் புழுக்கள் நீங்கும்.முருங்கைக்கீரைச் சாறை தேன் கலந்து காலை நேரத்தில் குடித்து வரும்போது உங்களுக்கு உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அந்த உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது.
எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் உணவில் கட்டாயம் முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி அளவாவது தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் சேர்த்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெற முடியும்.
இதை உணர்ந்தாவது இனி முருங்கைக் கீரையை நீங்கள் ஒதுக்கி வைக்காமல் உங்கள் உணவில் சேர்த்து பயன் பெறுங்கள்.