பொதுவாக முளைகட்டிய தானியங்களில் அதிக அளவு சத்து நிறைந்துள்ளது என்பது அனைவருக்குமே நன்றாக தெரியும். அந்த வகையில் பாசிப்பயறு முளைகட்டி நாம் காலையில் நம் உணவில் எடுத்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. அது மட்டும் அல்லாமல் இது ஒரு சூப்பர் பவர் பூட் என்று கூறலாம்.
இந்த முளைகட்டிய பாசிப்பயிரை நீங்கள் தினமும் உட்கொள்வதின் மூலம் என்னென்ன நன்மைகள் நம் உடலுக்குக் கிடைக்கிறது என்பதை விரிவாக இந்த கட்டுரையில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
முளைக்கட்டிய பயிரை உண்பதால் கிடைக்கும் நன்மைகள்
காலையில் முளைகட்டிய தானியங்களையும் இந்த பாசிப்பயிரை உண்பதால் உங்களுக்கு தேவையான ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் எளிதில் கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தருவதோடு பல ஊட்டச்சத்துக்களை உங்களுக்கு வாரி வழங்குவதில் இந்த முளைகட்டிய பயிர்களின் பங்கு அதிகம் என்று கூறலாம்.
இந்த முளைகட்டிய பயிர்களை தொடர்ந்து உண்பதின் மூலம் உங்கள் கண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பார்வை திறனை அதிகரிக்க கூடிய சக்தி இந்த முறை கட்டிய பயிருக்கு உள்ளது.
உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. அது மட்டுமல்லாமல் ஒமேகா த்ரீ அமிலங்கள் இதில் அதிக அளவு இருப்பதால் நல்ல கொலஸ்ட்ராலை உடலுக்கு கொடுக்கக்கூடிய தன்மை இந்த முளைகட்டிய பயிர்களுக்கு உள்ளது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக நார்சத்து அதிகமாக இருக்கக்கூடிய இந்த குறைந்த அளவு கலோரியை கொண்ட முளை கட்டிய பயிர்களை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.
சருமங்களில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளை குறைத்து கூந்தலுக்கு நன்மை செய்வதோடு பொடுகு இளநரை போன்ற பிரச்சனைகளை தீர்க்க கூடிய சக்தி இந்த முளைகட்டிய பயிருக்கு உள்ளது.
வயிற்றுப் பிரச்சனைகளை தீர்ப்பதோடு நார்ச்சத்து அதிகம் இருக்கக்கூடிய இதை நீங்கள் சாப்பிடும் போது வயிற்றில் Ph அளவை சீராக வைத்துக் கொண்டு அமிலத்தன்மையை குறைக்க கூடிய பணியை இந்த முளைகட்டிய பயறு செய்கிறது.
எனவே தினமும் ஒரு கைப்பிடி அளவாவது முளைகட்டிய தானியங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைய முடியும் என்பதை நீங்கள் இந்த கட்டுரையின் மூலம் உணர்ந்திருப்பீர்கள்.