குடும்பத்திற்காக எல்லாவற்றையும் அர்ப்பணித்த நடிகைகளின் ஒருவராக பானுப்ரியா [ Bhanupriya ] திகழ்கிறார். இருந்தும் என்ன பயன் சொத்துக்காக பானுப்பிரியாவை படாத பாடு படுத்துவதோடு மட்டுமல்லாமல் அத்தனை சொத்துக்களையும் பறித்துக் கொண்டு அவரை நடு ஆற்றில் விட்டு விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.
திரையுலகில் தன் அழகைக் காட்டி ரசிகர்களின் மத்தியில் பெருமளவு பேசப்பட்ட நடிகையாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் திகழ்ந்தவர் தான் பானுப்பிரியா.
தனக்கு என எதையும் வைத்துக் கொள்ளாமல் தன் குடும்பத்திற்காக திரைத்துறையில் ஓடி, ஓடி உழைத்து சொத்துக்களை சேர்த்தவர். தனது குடும்ப நபர்களை பெரிதாக நம்பியவர்.
இந்த நடிகையின் சொத்துக்கள் முழுவதையும் தற்போது அவரது குடும்ப நபர்கள் அபகரித்து விட்டார்கள் என்று கூற வேண்டும். மேலும் சொத்துக்களை அபகரிப்பதற்காக நடிகையை அவரது குடும்பம் ஏமாற்றி விட்டது.
நடிகை பானுப்ரியா நடித்த ஏராளமான படங்கள் வெற்றி படங்களாக அமைந்துள்ளது .மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் பல முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார்.
Bhanupriyaதிரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே வெளிநாட்டு மாப்பிள்ளை திருமணம் செய்து கொண்டு செட்டிலான எனினும் திருமணம் ஆன சில நாட்களிலேயே கணவரை விட்டு பிரிந்த இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி நடித்த பணத்தை நடிப்பின் மூலம் சம்பாதித்த பணத்தை தான் தனது குடும்பத்திற்காக கொடுத்திருக்கிறார்.
நடிகை பானுப்பிரியா பெயரில் இருந்த அத்தனை சொத்துக்களையும் இவரது பெற்றோர்கள் மற்றும் தங்கையின் பெயர்களுக்கு மாற்றிக் கொண்டார்கள். குறிப்பாக இவருக்கு சொந்தமான ஒரு வீட்டை பொய் சொல்லி தங்கள் பெயருக்கு மாற்றி இருக்கிறார்கள்.
இவர்களோடு இருப்பதை விட கணவனோடு சேர்ந்து வாழ்வதுதான் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி கணவனோடு சென்று சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையும் நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை .உடல் நலம் குறைவு காரணமாக சில வருடங்களிலேயே அவரது கணவரும் இறந்து விடுகிறார்.
Bhanupriyaஅடுத்து தனது மகளுக்காக வாழும் பானுப்ரியா தற்போது தனது மகளை வெளிநாட்டில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் இவருக்கு முன்பு நடித்தது போல நடிக்க முடியவில்லை.
காரணம் இவர் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தான் தற்போது அதற்கான சிகிச்சையையும் மேற்கொண்டு வருகிறார். அவர் குடும்பத்திற்காக செய்த தியாகத்தை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.
எனினும் கடந்தது கடந்தவையே.இனி சினிமாவை விட்டு ஒரு நாளும் நான் ஒதுங்க மாட்டேன் முடிந்தவரை வாய்ப்புகள் கிடைத்தால் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.