பிரபல நடிகை பாவனா கடந்த 2002ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நிம்மல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2006ஆம் ஆண்டு தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது தொடர்ந்து தமிழில் நடிகர்கள் ஜெயம் ரவி அஜித் மாதவன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்.
தமிழில் கடைசியாக 2010ஆம் ஆண்டு வெளியான நடிகர் அஜித்குமாரின் அசல் திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வந்த நடிகை பாவனா இடையில் பிரபல நடிகர் ஒருவரின் அத்துமீறலுக்கு உள்ளானார்.
அதன்பிறகு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட நடிகை பாவனா சினிமாவை விட்டு ஒதுங்கினார். அந்த இடைவெளியில் தன்னுடைய காதலரை திருமணமும் செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை பாவனாவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் கோல்டன் விசா வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு இவர் அணிந்திருந்த ஆடைகள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
தோல் நிறத்தில் உள்ளாடை அணிந்து கொண்டு வெள்ளை நிற மேலாடை அணிந்து கொண்டு வந்திருந்த நடிகை பாவனாவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
காரணம் அந்த அளவுக்கு படு கிளாமரான காட்சி அளித்தார் நடிகை பாவனா. இன்னும் சொல்லப்போனால் இந்த உடையை பார்த்த ரசிகர்கள் பலரும் உள்ளே எதுவும் அணியவில்லை வெறும் மேலாடை மட்டும் அணிந்து கொண்டு வந்திருக்கிறார் என்று கூட அதிர்ச்சியானார்கள்.
ஆனால் அவர் தோல் நிறத்தில் உள்ளாடை அணிந்து இருந்தார் என்பது தான் நிஜம். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள கூடிய சமீபத்தியபுகைப்படத்தில் தன்னுடைய கொள்ளை அழகால் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார் நடிகை பாவனா.