“சின்ன வயசுலேயே என்னோட அந்த உறுப்பு பெருசாகிடுச்சு..” – கடவுள் கிட்ட அழுதேன்..! – ரகசியம் உடைத்த பூமிகா..!

நடிகை பூமிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள விஷயம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் பி ஏ அருண் பிரசாத் இயக்கத்தில் வெளியான பத்ரி என்ற திரைப்படத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

நடிகை பூமிகா அதனைத் தொடர்ந்து ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல், சித்திரையில் நிலாச்சோறு, களவாடிய பொழுதுகள், கொலையுதிர் காலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதன் பிறகு திருமணம் குழந்தை என திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்ட நடிகை பூமிகா தற்போது கண்ணை நம்பாதே மற்றும் இயக்குனர் ராஜேஷ் இயக்கு உள்ள புதிய திரைப்படம் என இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். என்றாலும் கூட பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பிரபலத்தை பதிய வைத்திருக்கிறார் நடிகை பூமிகா என்று தான் கூற வேண்டும்.

அதிலும் சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெறும் முன்பே வா.. என் அன்பே வா.. என்ற பாடல் இளசுகள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. சினிமாவில் அறிமுகமான புதிதில் குடும்பப்பாங்கனியாக நடித்து வந்த நடிகை பூமிகா அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுத்தார்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருந்தார் அம்மணி. எனவே இவருக்கு தெலுங்கில் அதிக பட வாய்ப்புகள் குவிந்தன.

தெலுங்கு படங்களில் படுகிளாமரான படுக்கை அறை காட்சிகள் மற்றும் லிப்லாக் காட்சிகளில் கூட நடித்திருக்கிறார் நடிகை பூமிகா. ஆனால், தமிழில் கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டிய நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகை பூமிகா வின் பெயரில் இவரைப் போலவே இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோ காட்சிகளும் இணையம் இணைய வசதி பெரிதாக இல்லாத போது வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தான் அது பூமிகா கிடையாது பூமிகா போலவே இருக்கும் வேறொரு பெண் என்று தெரியவந்தது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பூமிகா தன்னுடைய உடல் உறுப்பு சிறு வயதிலேயே பெரிதாக இருந்தது இதனை பார்த்து பலரும் கேலி செய்தார்கள் என்று பேசி இருக்கிறார்.

அவர் கூறியதாவது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய உதடுகள் பெரிதாக மாறிவிட்டது. இதனால் பலரும் என்னை கிண்டல் செய்தார்கள்.

என்னுடைய உதட்டின் மீது எனக்கு ஒரு விதமான வெறுப்பு வந்தது. பூஜையறையில் நின்று கொண்டு கடவுளே என்னுடைய உதட்டை எப்படியாவது சிறிதாக்கி விடு என்று அழுதிருக்கிறேன்.

அதன்பிறகு நாட்கள் செல்லச் செல்ல நான் வளர வளர எனக்கு பிடித்து போய்விட்டது. கடைசியாக சினிமா படங்களில் நடிக்கும் அளவுக்கு எனக்கு வாய்ப்புகள் கிடைத்தது. இதற்கு முக்கிய காரணம் என்னுடைய உதடு தான் என்று கூறலாம்.

பலரும் என்னுடைய உதடு தான் என்னுடைய அடையாளமாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால் சிறு வயதில் நான் இந்த உதட்டை சிறிதாக்கி விடு என்று கடவுளிடம் அழுது கொண்டிருந்தேன் என்று நினைக்கும் போது எனக்கு சிரிப்பாக இருக்கிறது என்று பேசி இருக்கிறார் நடிகை பூமிகா. இவருடைய இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Actress Bhumika Chawla recently revealed in an interview that she was very self-conscious about her lip size during her childhood. She said that she was insecure about how people would perceive her because of the size of her lips.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …