” முகத்தில் இருக்கும் கரும்புள்ளியால் வெளியே செல்ல வெக்கமா? – மூன்றே நாள் முகப்பரு, கரும்புள்ளிக்கு TaTa சொல்ல இத செய்யுங்க..!!

இளம் பெண்களுக்கு இன்று முகப்பருக்களினால் ஏற்படும் தொல்லைக்கு எல்லையே இல்லை என்று கூறலாம். இந்த கரும்புள்ளி, முகப்பருவை நீக்குவதற்காக எண்ணற்ற வேதிப்பொருட்கள் கலந்திருக்க கூடிய  கலவைகளை பயன்படுத்திய போதும் அவர்களுக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

அப்படிப்பட்டவர்கள் அவர்களின் முகப்பருவை அந்த வேதிப்பொருட்களின் மூலம் குறைத்து இருந்தாலும் முகத்தில் ஏற்பட்டிருக்கும் கருப்பு நிற புள்ளிகளை விரட்ட முடியாமல் மன அழுத்தத்தோடு இருக்கிறார்கள்.

 அவர்கள் கட்டாயம் எந்த வழிமுறையை ஃபாலோ செய்தால் நிச்சயமாக முகத்தில் இருக்கக்கூடிய அந்த கருமை நிறம் மற்றும் கரும்புள்ளிகள் மாறி பளிச்சென்று பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிப்பீர்கள்.

கரும்புள்ளியை போக்கும் பொருட்கள்

1.முல்தான் மெட்டி

2.தக்காளி சாறு

3.தயிர்

ஒரு கிண்ணத்தில் ஒரு உங்களுக்கு தேவையான அளவு முல்தான் மெட்டி தக்காளி சாறு, தயிர் இந்த மூன்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 இதனை நன்கு கலந்து விடுங்கள். இந்த கலவையானது பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை நீங்கள் நன்றாக கலக்க வேண்டும். இதனை அடுத்து இந்த கலவையை உங்கள் முகத்தில் அப்படியே அப்ளை செய்து அரை மணி நேரம் காத்திருக்கவும்.

 நீங்கள் பயன்படுத்திகின்ற இந்த பேஸ்டில் தக்காளியில் இருக்கக்கூடிய சத்துக்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதோடு கரும்புள்ளிகளை நீக்க உதவி செய்கிறது.

 அதுபோலவே தயிர் ஆனது முகத்தை பொலிவோடு வைத்திருக்க உங்களுக்கு உதவி செய்கிறது. மேலும் எண்ணெய் பசையை நீக்குவதோடு கரும்புள்ளிகள் மேலும் படராமல் தடுக்க வழி செய்கிறது.

எனவே இந்த பேஸ்ட்யை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் கட்டாயம் உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய கரு புள்ளிகள் மட்டுமல்லாமல் கருப்பாக இருக்கக்கூடிய பகுதிகள் அனைத்தும் மெதுவாக வெள்ளை நிறத்தை வந்தடையும்.

நீங்கள் குறைந்த செலவில் நிறைந்த அழகினை நீங்கள் பெற விரும்பினால் கட்டாயம் இதை செய்தால் போதுமானது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …