பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் அக்டோபர் 3ம் தேதி தொடங்கியது. கடந்த 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் துபாயில் நடைபெற்ற மிஸ் குளோப் 2019 அழகிப் போட்டியில் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற அக்ஷரா ரெட்டியும் ஒருவர்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் அக்ஷரா இதுவரை பலமுறை நிகழ்ச்சியில் அழுது விட்டார். ஆரம்பத்தில் இருந்தே இவருக்கும் பாவனிக்கும் செட் ஆகவில்லை.
இருவரும் மாமியார் மருமகள் போல் சண்டை போட்டு கொள்கின்றனர். அக்ஷரா சொன்ன கதைக்கு ராஜூ பாய் லைக் போட்டதும் மிகப் பெரிய சலசலப்பை வீட்டில் ஏற்படுத்தியது.
இப்போது வரை பிக் பாஸ் வீட்டில் அக்ஷரா நெருக்கமாக இருப்பது சின்ன பொண்ணு, வருண், ராஜு பாயுடன் மட்டும் தான்.இணையதளங்களில் இவருக்கு ஃபேன்ஸ் பட்டாளமும் அதிகரித்துள்ளது.
அக்ஷராவுக்கு ஆர்மி பக்கங்களும் தொடங்கப்பட்டுள்ளன.இந்நிலையில், இவரது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய டீசர்ட்டை மார்பு வரை தூக்கி சிக்ஸ் பேக் வயிற்றை காட்டி அவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.