பிரபல சீரியல் நடிகை ஸ்யமந்தா கிரண். தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவருக்கு இப்போது 35 வயது ஆகின்றது.
வளசர வாக்கத்தில் வசித்து வரும் எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார். படிப்பு தவிர, நடனம் ஆடுவது மற்றும் பாடல்கள் பாடுவதை பொழுது போக்காக கொண்டுள்ளார்.
மேலும், விளம்பர படங்களிலும் நடித்து வரும் இவர் மற்ற நடிகைகளை போலவே மாடர்னான உடைகளை மிகவும் விரும்புபவர் ஆவர். அவ்வபோது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
நடிகை சியமந்தா கிரண் சீரியல்களில் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம், நிறைய ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
சமீபத்தில் , காதலர் தினத்தை ஒட்டி பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பொதுவாக தனக்கு காதலர் தினத்தின் மேல் பெரிதாக நம்பிக்கை இல்லை எனக் கூறும் அவர், காதல் எல்லோர் வாழ்விலும் எப்போதும் இருக்க வேண்டிய ஒரு உணர்வு என்கிறார்.காதல் மீது வெறுப்பு இருந்ததே இல்லை.
இதுவரை காதலில் விழுந்ததில்லை எனக் கூறும் சியமந்தா, ஒருவர் நேரில் வந்து தனது காதலை சொல்லும் போது, நிச்சயம் அவரை என் மனசுக்கு பிடித்து விட்டால் ஓகே சொல்லிவிடுவேன் என்றும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
அந்த வகையில், சமீபத்தில் இவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதனை பார்த்த ரசிகர்கள், எல்லோரும் கையில தான வளையல் போடுவாங்க.. நீங்க என்னஜாக்கெட்ல போட்டுக்கிட்டு இருக்கீங்க என்று கலாய்த்து வருகிறார்கள்.