“ப்பா.. நம்ம நயனா இது..? பிரபாஸ் மேல ஏறி.. வெறித்தனமான ரொமான்ஸ்..” – வாயடைத்து போன ரசிகர்கள்..!

 

ஹரி இயக்கத்தில் சரத்குமார் அப்பா, மகன் என்று இரண்டு வேடங்களில் நடித்த ஐயா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர்.நயன்தாரா. அதன் பிறகு அவர் ரஜினிகாந்துடன் சேர்ந்து சந்திரமுகி படத்தில் நடித்தார். 

 

முதல் படத்தில் சுப்ரீம் ஸ்டார், அடுத்த படமே சூப்பர் ஸ்டார், யாருய்யா இந்த பொண்ணு என்று பலரையும் வியக்க வைத்தார். கஷ்டப்பட்டு உழைத்து கோலிவுட்டின் முன்னணி நடிகையாகியிருக்கிறார் நயன்தாரா. 

 

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை எடுப்பவர்களின் முதல் தேர்வாக இருக்கிறார். இந்நிலையில் தனுஷின் கர்ணன் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் கலைப்புலி எஸ். தாணு பேட்டி ஒன்றில் நயன்தாரா பற்றி ஒரு விஷயம் சொல்லியிருக்கிறார்.

 

அந்த பேட்டியில் தாணு கூறியதாவது, துரை இயக்கத்தில் சிம்பு நடித்த தொட்டி ஜெயா படம் மூலம் தான் நயன்தாரா கோலிவுட்டில் அறிமுகமாக வேண்டியது. நான் தான் அவரை அறிமுகம் செய்து வைக்க வேண்டியது. 

 

தொட்டி ஜெயா படத்திற்கான நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடந்தபோது பத்திரிகை ஒன்றில் நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்தேன். தொட்டி ஜெயாவில் நயன்தாராவை நடிக்க வைக்க நான் விரும்பியபோது இயக்குநர் துரையும், கேமராமேன் ஆர்.டி. ராஜசேகரும் கோபிகாவுக்கு வாக்குறுதி அளித்துவிட்டனர். 

 

அதனால் நயன்தாராவை அந்த படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை என்றார்.இந்நிலையில் நடிகை நயன்தாரா தெலுங்கு நடிகர் பிரபாஸுடன் இணைந்து நடித்த நெருக்கமான காட்சிகள் வைரலாகி வருகிறது.அதாவது தெலுங்கில் யோகி என்றும் தமிழில் முரட்டு தம்பி என்றும் வெளியான படத்தில் இடம்பெற்ற காட்சிகள்தான் அவை. 

அந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் வெறித்தனமான ரொமான்ஸ் காட்சியில் நடித்திருக்கிறார் நயன்தாரா.இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம நயனா இது..? என்று அதிர்ச்சியில் வாயடைத்து போயுள்ளனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *