நடிகை நீலிமா ராணி சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தாவர், சினிமாவில் மட்டும் அல்லாமல் சின்னத்திரையிலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது அசால்ட்டான நடிப்பு வெளியிட்டு தம்முடைய மார்க்கை ஸ்கோர் செய்வார்.
இந்த நிலையில் நீலிமா ராணி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கினார் இவர் தேவர்மகன், விரும்புகிறேன், பாண்டவர் பூமி ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
ஒரு காலத்தில் ஆறு மணி ஆகிவிட்டால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து மெட்டி ஒலி சீரியல் பார்த்தால்தான் தூக்கம் வரும் அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நீலிமாராணி.
பொதுவாக நீலிமா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் தான் அதிகமாக நடித்திருப்பார் ஏனென்றால் இவர் முக பாவனை அனைத்தும் வில்லி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும்.
சீரியலில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சினிமாவில் இவர் நடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இன்னும் குறையவில்லை, சின்னத்திரையில் வில்லியாகவும், காதலியாகவும், மனைவியாகவும் தாயாகவும் என பல கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்ற இவர் தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் சமூக வலைதளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில்தான் ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில், சேலையில் காட்சி தந்து கலக்கியிருந்தார் நீலிமா அந்த போட்டோக்கள் எல்லாமே சூப்பராக வைரலாகி விட்டன .
இந்த வயதிலும் கலக்கறீங்களே என்று நீலிமாவுக்கு பலரும் பாராட்டுப் பத்திரம் வாசித்திருந்தனர் .ஆனால் இப்போது இன்னும் குளோசப்பாக படத்தைப் போட்டு பலரது தூக்கத்தை காலி செய்து விட்டார் நீலிமா.