பிரபல தொகுப்பாளினியுடன் ஒரே அறையில் முன்னணி நடிகர் – கையும் களவுமாக பிடித்த மனைவி..!

கோலிவுட்டின் மன்மத ராசா இந்த நடிகர். ஆறு மாசம் ஆஹோ ஓஹோ என்று பாராட்டப்படுகிறார். அடுத்த ஆறு மாசம் சர்ச்சையில் சிக்கி சின்னா பின்னமாகிறார். இதுவே இவருக்கு வாடிக்கையாகி போய்விட்டது.

 

அண்ணன், தம்பி, அப்பா என சினிமா குடும்பம், பெரிய இடத்து மருமக புள்ளை, கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை அசுர வளர்ச்சி என ஒரு பக்கம் இருந்தாலும் சில சில்லறை தனமான வேலைகளால் அவ்வப்போது சிக்கிக்கொண்டு சீக்கியடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் இந்த மன்மத ராசா. 

 

இன்னொரு தடவ மன்மத ராசா கூட சேர்ந்துகிட்டு சுத்துரதை பாத்தோம்.. வேற மாறி ஆகிடும் என பிரபல ஒல்லி இசையமைப்பாளரை அவரது குடும்பத்தினரே மிரட்டி வைக்கும் அளவுக்கு போன கதையெல்லாம் பழசு. இதனால், இனிமேல் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்ற முடிவுக்கு வந்தார் அந்த ஒல்லி இசையமைப்பாளர். 

 

சேர்க்கை சரி இல்ல மகனே

 

நடிகரும், இசையமைப்பாளரும் சேர்ந்தால் அனல் பறக்கும் ஹிட் தான் என்ற பேச்சு எல்லோருக்கும் தெரியும். ஆனால், இருவரும் சேர்ந்தால் அவர்கள் வீடே தீப்பிடித்துக்கொள்ளும் என்பது பலருக்கு தெரியாத விஷயம். அறியாபுள்ளையாக சுற்றிக்கொண்டிருந்த ஒல்லி இசையமைப்பாளரின் அந்த மாதிரி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. 

 

அந்த சம்பவம் நடக்கவும், அந்த வீடியோ இணையத்தில் வெளியாகவும் காரணமே அந்த ஒல்லி நடிகர் தான் என்று வந்த ரிப்போர்ட்டுகளால்.. சேர்க்கை சரி இல்ல மகனே என்று அதட்டி அடக்கி வைத்துள்ளனர் அந்த ஒல்லி இசையமைப்பாளரின் குடும்பத்தார். 

 

தொகுப்பாளினியுடன் ஒரே அறையில்

 

நிலவரம் இப்படி இருக்க இப்போது லேட்டஸ்ட் கஜகஜா ஒன்றில் சிக்கியுள்ளார் மன்மத ராசா. அது சரி, மன்மத ராசா வாழக்கையில் இதெல்லாம் சகஜமப்பா என்பீர்கள். ஆனால், இவர் இப்போது சிக்கியிருப்பது தன்னுடைய சொந்த வீட்டில். வெளிநாடுகளில் ஷாப்பிங் செய்வதில் அதீத ஆர்வம் கொண்ட மன்மத ராசாவின் மனைவி சமீபத்தில் வெளிநாடு சென்றுள்ளார். ஆனால், திரும்புவதாக சொன்ன தேதிக்கு ஒரு நாள் முன்பே திரும்பியுள்ளார். 

 

வந்தவர் கணவருக்கு சர்ஃப்ரைசாக இருக்கட்டும் என அவரிடம் சொல்லாமே வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் புதிய கார் ஒன்று நிற்பதை பார்த்து ஷாக் ஆகியுள்ளார். கணவருக்கு சர்ஃப்ரைஸ் கொடுக்க சென்ற அவருக்கு கணவர் கொடுத்த சர்ஃப்ரைஸ் வேற ரகம். 

 

பிரபல தொகுப்பாளினியுடன் ஒரே அறையில் இருந்துள்ளார் மன்மத ராசா. ஏற்கனவே, இருவருக்கும் பழக்கம் இருந்த போது கண்டித்து அனுப்பியவர் தாய்குலம். இதனால், அவரை கண்டதும் எதுவும் பேசாமல் துண்டை காணோம்.. துணியை காணோம் என எஸ்கேப் ஆகி விட்டார் தொகுப்பாளினி. 

 

ஒத்தாசையாக இருக்க வந்து ஓட்டம்

 

கொரோனா காரணத்தால் வீட்டில் வேலை ஆட்கள் யாரும் இல்லாததால் தனிமையில் இருந்த மன்மத ராசாவுக்கு ஒத்தாசையாக இருக்க சென்று சிக்கிக்கொண்டார் தொகுப்பாளினி. இதனை அடுத்து மன்மத ராசா வீட்டில் எக்கசக்க பஞ்சாயத்து நடந்து வருகிறதாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *