சித்தி 2 சீரியலில் நடித்து வந்தவர் தமிழ் சீரியலின் வில்லி நடிகையான காயத்திரி யுவராஜ். சீரியல் துவக்கப்பட்ட போது நிகிலா ராவ் என்பவர் நடித்து வந்த நந்தினி கேரக்ட்ரில் அவருக்கு பதிலாக மாற்றப்பட்டவர் காயத்திரி யுவராஜ்.
நந்தினி கேரக்டரில் நடித்து வந்த காயத்ரி யுவராஜ் சில நாட்களாக சீரியலில் காணப்படவில்லை.சன் டிவியின் பிரபல ஹிட் சீரியலான தென்றலில், நிலா என்ற கேரக்டரில் நடித்தன் மூலம் சீரியலுக்குள் நுழைந்தார்.
அரண்மனை கிளி சீரியலிலும் நடித்துள்ளார். டான்ஸரான காயத்ரி யுவராஜ் Mr and Mrs கில்லாடி, ஜோடி நம்பர் 1 சீசன் 9 போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுள்ளார். கலைஞர் டிவியின் மானாட மயிலாடவில் போட்டியாளராக பங்கேற்றார்.
விஜய் டிவி-யின் சரவணன் மீனாட்சி சீரியலில் முத்தழகு கேரக்டரில் வில்லியாக கலக்கல் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.இதில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஊமகொட்டுச்சி என்று மாயன் அழைக்கும் அளவிற்கு அமைதியும் சொரூபமாக இருக்கிறார்.
ஆனால் சித்தி சீரியலில் இவரே வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். சரவணன் மீனாட்சி சீரியல் வில்லியாக நடித்து இருந்தாலும் தற்போது சித்தி சீரியலில் அனைவரையும் மிரட்டி வருகிறார்.
சீரியலில் நடிக்கும் நடிகைகள் ஆக இருந்தாலும் சரி சினிமாக்களில் நடிக்கும் நடிகைகள் ஆக இருந்தாலும் சரி புது பட வாய்ப்புக்காக கையில் எடுத்திருக்கும் ஒரே ஆயுதம் போட்டோஷூட் தான். அதையும் விதவிதமாக எடுத்து தங்களின் திறமையை காட்டி இன்ஸ்டாகிராம் போன்ற வலை தளங்களில் அப்லோட் பண்ணி கொண்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில், மாடர்ன் உடையில் மெழுகு சிலை போல கொளுக்கு மொழுக்கு என இருக்கும் தன்னுடைய சில புகைபடங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.