தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் நிறைய வந்துள்ளார்கள். ஆனால், அவர்கள் திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து நீடிக்க முடியும். இல்லாவிட்டால், கோலிவுட்டின் கமர்சியல் சூறாவளியில் சில படங்களிலேயே காணாமல் போக வேண்டியதுதான்.
அப்படி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி வாரிசு நடிகையாக சினிமாவுக்குள் வந்தாலும் தனது திறமையால் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் ஹீரோயின் நடிகை என்றால், வெறும் கவர்ச்சி, அசட்டுப் பெண்ணாக மட்டும் நடிக்காமல், ஹீரோயின், வில்லி என வரலட்சுமி கலவையாக ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.
போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வரலட்சுமி, விரைவிலேயே தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, மாரி 2 ஆகிய படங்களில் குறிப்பிடும் படியாக நடித்துள்ளார்.
அதே நேரத்தில் சர்க்கார் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த வரலட்சுமியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து, சிறப்பாக எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் வெளுத்து வாங்கும் வரலட்சுமிக்கு தமிழ் சினிமா மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் வாய்ப்புகள் தேடி வருகின்றனர்.
இதனால், வரலட்சுமி தென்னிந்திய சினிமாக்களில் நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா மற்றும் குடும்பத்தினர் சென்னை வந்த போது சரத்குமாரின் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது, எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வர லக்ஷ்மி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், காசு குடுத்தா கூட இது மாதிரி காம்பினேஷன் கிடைக்காது. டஸ்க்கி நாட்டுக்கட்ட… மில்க்கி சந்தன கட்ட… என்று உருகி வருகிறார்கள்.