குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நஸ்ரியா தற்போது சினிமாவில் முக்கிய புள்ளியாக விளங்கி வருகிறார். திருமணத்திற்கு பின்பு இவர் பெரிய அளவில் படங்கள் எதுவும் நடிக்கவில்லை என்றாலும் இவரது மார்க்கெட் தற்போது வரை உயரத்தில் தான் இருந்து வருகிறது.
மேலும் இவர் எப்போது சினிமாவில் கம்பேக் கொடுப்பார் என்றும் அவரது ரசிகர்கள் தினமும் காத்து வருகின்றனர். அதற்கு காரணமே இவரது எக்ஸ்பிரஷன் தான்.
மலையாளத்தில் வெளியான நடித்து வந்த இவர், நேரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நடிகை நஸ்ரியாவிற்கு சிறந்த வரவேற்பை ஏற்படுத்தியது.
நடிகை நஸ்ரியா கடைசியாக தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் நடித்திருந்தார். நடிகர் பாஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை நஸ்ரியா மீண்டும் சில வருடங்களுக்கு முன் தான் திரையுலகில் நடிக்க துவங்கியுள்ளார்.
இந்நிலையில் திருமணமான பின் உடல் எடை கூடி குண்டாக இருந்த நஸ்ரியா, மீண்டும் ராஜா ராணி படத்தில் பார்த்ததை போல் மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார்.நடிகர் தனுஷ், நடிகை நஸ்ரியா இணைந்து நடித்த, நய்யாணடி படத்தை சற்குணம் இயக்கியிருந்தார்.
இந்த படத்திலும், ‘இனிக்க இனிக்க பார்ப்பதென்ன’ என்ற பாடலில், தனது தொப்புள் தெரியுமாறு டூப் நடிகையை வைத்து, இயக்குனர் காட்சிகளை சேர்ந்து மோசடி செய்துள்ளார், என நடிகை நஸ்ரியா போலீஸ் கமிஷ்னர் மற்றும், நடிகர் சங்கத்திடம் புகார் செய்தார்.
இதனால், இந்த பிரச்னை பரப்பரப்பு பெற்றது. இந்நிலையில், குடும்பத்தினருடன் நீச்சல் உடையில் குதுகலமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் நஸ்ரியா. இதனை பார்த்த ரசிகர்கள், தமிழ் படத்துல தொப்புளை காட்டிட்டாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இப்போது நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார் என்று வியந்து வருகிறார்கள்.