தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியாக இருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். குறிப்பாக ரோஜா சீரியலுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு 800வது எபிசோடை நிறைவு செய்த ரோஜா சீரியலில் சிபுசூரியன் கதாநாயகனாகவும், பிரியங்கா நல்காரி நாயகியாகவும் நடித்து வருகின்றனர்.இந்த சீரியலில் ஹீரோயினான பிரியங்கா நல்காரி ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
இவர் ஆந்திராவின் விசாகபட்டினத்தில் பிறந்தவர். ஆந்திராவிலேயே பிறந்து வளர்ந்த இவர் அம்மாநிலத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். பள்ளி பருவத்திலேயே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட பிரியங்கா, தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
தொடர்ந்து டோலிவுட்டில் 2010-ம் ஆண்டு பிரபல டைரக்டர் சந்திரா சித்தார்த்தா இயக்கத்தில் வெளிவந்த ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் நடிகை பிரியங்கா நல்காரி அறிமுகம் செய்யப்பட்டார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. குட்டியான உடையில் தளதள என இருக்கும் தனது தொடையழகை காட்டி இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.