என்னதான் சீரியல்களில் வில்லியாக இருந்தாலும் ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக தான் பாரதிகண்ணம்மா வெண்பா அதாவது பரீனா ஆசாத் இருந்து கொண்டிருக்கிறாராம் . இன்ஸ்டாகிராமில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது .
இவருக்காக பலர் கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.சீரியல்களில் இவரை கழுவி கழுவி ஊற்றினாலும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இவர் அழகை புகழ்ந்து துதி பாடும் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.
பாரதி கண்ணம்மா சீரியல் பார்த்து இவரை திட்டாத அவர்களே இல்லை. அந்த அளவிற்கு இவர் வில்லத்தனத்தை காட்டி வருகிறார். இவருக்கு எப்போதுமே நடிகையாக நடிப்பை விடவும் வில்லியாக நடிப்பது தான் ரொம்பவும் பிடிக்குமாம்.அதனால் தான் விஜே வாக இருந்தவருக்கு இந்த சீரியலில் இருந்து நடிக்க வாய்ப்பு வந்ததும் உடனே சம்மதித்து விட்டாராம்.
ஆனால் இந்த சீரியலில் நடிக்கும்போது இவர் முதலில் ஹீரோயினாக தான் நினைத்திருக்கிறார். ஆனால் கொஞ்ச நாள் கழித்துதான் தெரிந்திருக்கிறது இவர்தான் வில்லி என்று இவருக்கு ஆனால் அவருக்கு பிடித்தமான கேரக்டர் என்பதால் இவர் இதை ஏற்றுக்கொண்டு கலக்கி வருகிறார்.இந்நிலையில் இவர் கடந்த வாரம் மிகவும் சந்தோஷமான செய்தி ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு, தன்னுடைய கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஃபரீனா தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.முதல் முறையாக தன்னுடைய பேபி பம்ப் தெரியும்படி எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். மேலும் ஆமாம் தான் கர்ப்பமாக இருக்கிறேன்.
இன்னும் 3 மாதங்களில் குழந்தையை வரவேற்க காத்திருப்பதாகவும், தன்னுடைய 4 வருட கனவு நினைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இதை தொடர்ந்து இவர் தற்போது வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படம் கொஞ்சம் ஓவர் தான் என்கிற எண்ணத்தை வரவைத்துள்ளது.கர்ப்பமாக இருக்கும் வயிற்றில்… குழந்தை தூங்குவது போன்று மெஹந்தியால் வரைந்து கலர் ஃபுல் போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து கொண்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பலர் கண்ணு பட போகுது இது போல் வயிறு தெரியும்படி புகைப்படம் போட வேண்டும் என ஃபரீனாவுக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள்.