2012ஆம் ஆண்டில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் நடிகை சரண்யா. இதனைத்தொடர்ந்து நியூஸ்18 தொலைக்காட்சியில் செய்தி நிபுணராக பணியாற்றினார்.
இவ்வாறு செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிறகு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு திரையுலகில் பிசியாக இருந்து வரும் சரண்யா இணையதளங்களில் தனது கவர்ச்சியான மற்றும் க்யூட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்பொழுது தன் கணவருடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிங்கிள் சாபம் உங்களை சும்மா விடாது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.