தல அஜித்-துக்கு கார்பந்தயம் என்றால் மிகவும் பிடிக்கும் ஆரம்ப காலத்தில் கார் பந்தயத்தில் பங்கேற்ற அதோடு மட்டுமல்லாமல் பைக்கில் போக வேண்டும் என்றால் அவருக்கு மிகவும் பிரியமான விஷயம்.
பலமுறை கார் பந்தயங்களில் பங்கேற்ற போது ஏற்பட்ட விபத்துகளினால் அவர் சினிமாவில் சில சறுக்கல்கள் ஏற்பட்டது உண்மையே. எனினும் அவர் அவற்றின் மீது கொண்ட அளவிலான பிரியத்தை விடவில்லை. எனினும் சினிமா படத்தில் நடிப்பதற்காக அவர் கார் பந்தயங்களில் பங்கேற்பதை தவிர்த்து விட்டார்.
அவர்கள் மீது உள்ள மோகம் குறைந்தாலும் பைக் ரேஸில் இருக்கக்கூடிய ஆர்வமும் மோகமும் இவருக்கு குறையவில்லை எனவேதான் அடிக்கடி பைக் ரேஸில் இவர் பங்கேற்று வருகிறார் இவர் தற்போது லடாக்கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் இந்த சுற்றுப் பயணத்துக்கு அவர் எந்த வண்டியை பயன்படுத்தி இருக்கிறார் தெரியுமா?
பி.எம்.டபிள்யூ அந்த பைக் இவர் இந்தியா என்றாலும் சரி வெளிநாடு என்றாலும் சரி எங்கு செல்கிறாரோ அங்கு ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அதை ரைட் செல்வது இவருக்குப் பிடித்த விசயமாகும்.
தமிழ் திரையுலகை பொறுத்தவரை இரட்டையர்களின் ஆட்சி எப்போதும் இருந்தது குறிப்பாக எம்ஜிஆர், எம் ஆர் ராதா பின்னர் கமல் ,ரஜினி அதன்பின்னர் அஜித், விஜய் என்று இவர்களின் வரிசையை சொல்ல முடியும்.
இவர்களுக்குப் பின் யார் என்ற கேள்வி கேள்விக்குறியாகவே உள்ளது. நடிப்பில் மட்டுமல்லாமல் மக்களுக்கு உதவக்கூடிய நல்ல குணம்படைத்தவர் தான் தல அஜித்.
விஷயம் என்னவென்றால் இவர் தற்போது ஓட்டி சென்று இருக்கக்கூடிய இந்த இரு சக்கர வாகனம் ஆன பிஎம்டபிள்யூ விற்கு இன்சூரன்ஸ் ஏதுமில்லை இன்சூரன்ஸ் இல்லாத வண்டியை ஓட்டிச் சென்று இருக்கிறதாக மிகப்பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.
அந்த பைக்கின் இன்சூரன்ஸ் கடந்த 2020-ம் ஆண்டே முடிந்துவிட்டதாகவும், அஜித் இதனை புதுப்பிக்கவே இல்லை என ஒருவர் ஆதாரத்தை வெளியிட்டு உள்ளார்.
சட்டதிட்டங்களையும் நாட்டையும் மதிக்கக்கூடிய தல அஜித் இப்படி செய்திருப்பாரா?உண்மை என்ன என்பது அவர் கூறினால் மட்டுமே தெரிய வரும்.