“ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி, ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி…” – சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி..!

தற்போது, ‘கயல்’ சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி. இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி என்ற தொடரில், ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி. அந்த சீரியலில் ஸ்வேதா என்ற பெயரில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.

இப்போது, சன் டிவியில் இவர் நடித்த கயல் சீரியல் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில், ஆல்யா மானசா கணவர், சஞ்சீவ், கார்த்திக் என்ற கேரக்டரில் நடிக்கிறார். இவர்தான், இந்த நாடகத்தில், கயல் கதாபாத்திரத்தின் ஜோடியாக உள்ளார்.

வழக்கமாக, இப்போது தமிழ் சீரியல்கள் பலவும், ஹீரோயினிசம் கொண்டவையாகவே இருக்கின்றன, பெரிய திரையான சினிமாவில், எப்படி ஹீரோயிசம் நிறைந்த படங்களாக வருகிறோ, அதே போல் டிவி சீரியல்களில் பெண்களை மையப்படுத்தும், பெண்கள் போராடி சாதனை படைப்பவர்களாக, எதிரிகளின் சதி திட்டங்களை முறியடிப்பவர்களாகவே, காட்டப்படுகி்ன்றனர். இந்த சீரியலும் அந்த வகையில் சேர்ந்ததுதான்.

தன்னை சுற்றி நடக்கும் தனக்கு எதிரான விஷயங்களை, குடும்ப சிக்கல்களை, எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் தனக்கு ஏற்படுத்தும் துன்பங்களை தனது புத்திசாலித்தனத்தால், கயல் என்ற கதாபாத்திரம் வெல்வது போன்ற கதைதான் இதுவும்.
கயல் கேரக்டரில் நடித்துள்ள சைத்ரா ரெட்டி, கடந்தாண்டு வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். போலீஸ் அதிகாரி தலைமையின் கீழ், கம்ப்யூட்டர் செக்‌ஷனில் சைபர் க்ரைம் பிரிவில் பணிபுரியும் ஒரு பெண் போலீஸ் கேரக்டரில் இவர் நடித்திருந்தார்.

இந்த கேரக்டரில் மிக கெத்தாக நடித்திருந்தார் சைத்ரா ரெட்டி. இதில் ஒரு காட்சியில், ரோட்டோரத்தில் அஜித் யோசனைப்படி சைத்ரா ரெட்டி, காத்திருக்க அவரை பைக்கில் வரும் வில்லன், நீண்ட கத்தியால் வெட்டுவது போன்ற விறுவிறுப்பான காட்சி, படத்தில் பலத்த வரவேற்பை பெற்றது. அதுபோல், படத்தில் வில்லன் இருப்பிடங்களை கண்டறியும் காட்சிகளிலும் ஒரு விறுவிறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சைத்ரா ரெட்டி.

சைத்ரா ரெட்டி, கயல் நாடகத்தில் நடிக்கும் நேரம் போக, மற்ற நேரங்களில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருக்கிறார். அவ்வப்போது, தனது படங்கள், வீடியோக்களை அப்டேட் செய்கிறார். அழகான, கவர்ச்சியான இவரது புகைப்படங்களை காண, ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதனால், லைக்ஸ் தெறிக்கிறது. கமெண்ட்டுகள் குவிகிறது.

இப்போது, வெளிநாடு சென்றிருக்கும் சைத்ரா ரெட்டி, அந்த புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த படங்கள், இப்போது டிரெண்டிங் ஆகி வருகின்றன. இதில், பயணங்கள் என்பது, நமக்கு நாமே சந்தோஷத்தை முதலீடு செய்து கொள்வதைப் போன்றது என்ற அர்த்தம் வரும் விதமாக, ஒரு கேப்சனை அதில் சைத்ரா ரெட்டி தந்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …