இன்று படத்தில் காட்டப்படுவது போல கொலைகள் அரங்கேறுவது இயல்பாகிவிட்டது அப்படிப்பட்ட ஒரு கொலைதான் சென்னை மயிலாப்பூரில் நடந்த இரட்டை கொலை என்பதை கூறலாம்.
கொலை வழக்கில் எவ்வாறு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள் அவர்கள் எவ்வாறு கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினார்கள் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
ஐடி கம்பெனி அதிபர் ஸ்ரீகாந்த் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தக் கொலையைச் செய்தவர் அவர்களின் கார் ஓட்டுனர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவி ரா என்பது தெரியவந்துள்ளது.
பணத்திற்காக இந்த கொலையை செய்ய மூன்று மாதங்களாக திட்டம் தீட்டுப்பட்டதை வந்ததை போலீசார் தற்போது கண்டுபிடித்து விட்டார்கள்.
விசாரணையில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி பிணங்களைப் புதைப்பதற்காக 3 நாட்களுக்கு முன்பே குழி தோண்டியதாகவும் பண்ணை வீட்டில் தங்கி இருந்த தனது குடும்பத்தாரை கிருஷ்ணா நேபாளத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதை அடுத்து கிருஷ்ணா தன் நண்பர் ரவி ராயுடன் இணைந்து கொலை செய்து பண்ணை வீட்டில் உடல்களைப் புதைத்து விட்டு 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் தப்ப முயன்ற போது தமிழக போலீசார், ஆந்திர காவல்துறையின் உதவியுடன் கொலையாளிகளைக் கைது செய்தனர் அவர்களை வரும் 20 வதாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்படி எல்லாம் நிஜவாழ்க்கையில் நடக்குமா? என்று எண்ணுமளவுக்கு இந்த கொலை நம்மை யோசிக்க வைத்துள்ளது.