பிரபல பாடகி சின்மயி ஸ்ரீ பாதா மற்றும் அவருடைய கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன் ஆகிய இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்தது.
அதில் ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை. பிறந்த குழந்தைகளுக்கு பாடகி சின்மயி ட்ரிப்தா மற்றும் ஷர்வாஸ் என்று பெயரிட்டு இருக்கின்றனர்.
இதுவரை பாடகி சின்மயி தன்னுடைய குழந்தைகளின் முகங்களை வெளியில் காட்டாமல் இருந்தார். அதற்கு ஒரு காரணமும் கூறினார் சின்மயி.
அது தான் பேசுபொருள் ஆனது. அதாவது தன்னுடைய குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டால் அதனை கிண்டல் செய்வதற்கான பெரிய கூட்டமே இருக்கிறது எனவும், இதனால் தான் என்னுடைய குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிடாமல் இருக்கிறேன் என்று கூறியிருந்தார் சின்மயி.
இந்நிலையில், தற்பொழுது தன்னுடைய குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த குழந்தைகள் தங்களுடைய பொம்மைகளுட மற்றும் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து கொண்டு விளையாடி மகிழும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த சில ஆசாமிகள் சின்மயி ஏற்கனவே கூறியது போலவே மோசமான கருத்துக்களை கொண்டு விமர்சிக்க தொடங்கி விட்டார்கள்.
இந்த குழந்தைகளை பார்க்கும் பொழுது வைரமுத்து சாயலில் இருப்பதாக வேண்டுமென்றே விஷமத்தனமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கு காரணம் நடிகை சின்மய ஸ்ரீபாதா பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார். இதுனால் வரை புகார் கூறிக் கொண்டிருக்கிறார்.
இந்த வகையில், இவருக்கு குழந்தை பிறந்திருக்கும் நிலையில் அந்த குழந்தைகள் வைரமுத்து சாயலில் இருப்பதாக விஷமாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் சில ஆசாமிகள். இது சின்மயி கூறியதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.