அட ஒரு பாடல் காட்சிக்காக பிரான்ஸ் கிளம்பினார்களா ? சிரஞ்சீவி மற்றும் சுருதிஹாசன்…!!

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படியோ அப்படித்தான் மெகா சூப்பர் ஸ்டாராக தெலுங்கு இருப்பவர் சிரஞ்சீவி.பல தெலுங்கு வெற்றி படங்களை கொடுத்த இவர் தற்போது வரை அசைக்க முடியாத  சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் என்று கூறலாம்.

மேலும் தெலுங்கில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.இவரின் காட்பாதர் வெட்டி படத்தை தொடர்ந்து சிரஞ்சீவியின் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் தான் வால்டர் வீரையா.

 இந்தப் படத்தை இயக்குனர் பாபி இயக்கி வருகிறார். வரும் ஜனவரி 13ஆம் தேதி சங்கராந்தி பண்டிகை என்று எந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

 அடுத்து இந்த படத்தில் ஜோடியாக உலகநாயகன் கமலஹாசனின் மகளாகிய சுருதிஹாசன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் இவர் கேத்தரின் தெரசா என்ற முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

 அப்பாவைப் போலவே நடிப்பில் பட்டையை கிளப்பி வரும் இவர் இந்த கேரக்டர் ரோலை திறம்பட செய்திருப்பார் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

 மேலும் இந்தப் படத்திற்கான இசையை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்த படத்திலிருந்து வெளியான பாஸ் வச்சிண்டு என்கிற பாடல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

 இதனை அடுத்து இந்த படத்தில் மீண்டும் ஒரு பட காட்சி அதுவும் குறிப்பாக பாடல் காட்சி படம் பிடிக்க வேண்டிய நிலையில் அதை படம் பிடிப்பதற்காக தற்போது அவர்கள் பிரான்ஸ் சென்று இருக்கிறார்கள்.

இதற்காக சிரஞ்சீவி மற்றும் சுருதிஹாசன் பிரான்ஸ் கிளம்பி சென்றபோது தன்னுடைய குடும்பத்தையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.

மேலும் சிரஞ்சீவி இது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் தனது சோசியல் மீடியாவில் தற்போது பகிர்ந்து இருக்கிறார். அதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள் என்று கூறலாம்.

 எனவே சிரஞ்சீவி தற்போது பிரான்சில் தனது குடும்பத்தோடு என்ஜாய் பண்ணுவதோடு மட்டுமல்லாமல் சூட்டினிலும் பங்கேற்று திரும்புவார் என தெரியவந்துள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …