இதனால் தான் தற்கொலை செய்து கொண்டாரா காமெடி நடிகை ஷோபனா..! – அதிர்ச்சி தகவல்..!

மீண்டும் மீண்டும் சிரிப்பு என்னும் காமெடி தொடர் மூலம் பிரபலமானவர் காமெடி நடிகை ஷோபனா. நடிகர் வெண்ணிறாடை மூர்த்தியடனும், நடிகர் வடிவேலு உடனும் பல படங்களில் இணைந்து நடித்து மக்களிடையே பிரபலமானவர் ஷோபனா. ஷோபனா அம்மா வைரம் ராணி, அப்பா ஜெயராமன், இவருக்கு ஒரு அக்கா உள்ளார்.

இவரின் அம்மாவும் நாடகம் மற்றும் சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார், இவரது அப்பாவும் நாடக நடிகர் தானாம். அக்கா ஆனந்தி டைரக்டர் குருசங்கரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இவர்கள் குடும்பமே ஒரு சினிமா குடும்பமாம்.

நடிகை ஷோபனா தனது 15 வயதில் இருந்தே நடித்துக் கொண்டிருக்கிறார். திரைத்துறையில் காமெடி நடிகைகள் என்றால் அது வெகு சிலரே.

ஆச்சி மனோரமா நடிகை கோவை சரளா என்போர் வரிசையில் நடிகை ஷோபனா இருந்தார். இவர் கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவரும் வடிவேலுவும் இணைந்து நடித்த ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் வடிவேலு இவருடன் சண்டை போடுவது போன்று பேசிக் கொண்டிருக்கிறேன் மாமா என்று கூறும் டயலாக் மிகவும் பிரபலமானது.

மெல்ல மெல்ல இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டிருந்த சூழலில் திடீரென்று 2011 இல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இவரது தாய் இவர் ஒருவரை காதலித்ததாகவும் ஆனால் அவர் இவளை ஏமாற்றி விட்டதாகவும் அதனால் திருமணத்தின் மீது வெறுப்பாகி திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்ததாகவும் கூறினார்.

மேலும் இவரது உடல் நலமும் சரியில்லை என்றும் மஞ்சக்காமாலை சுவாச பிரச்சனைஎன்று மாறி மாறி நோய் நோய் வாய்ப்பட்டதாகவும் அதனால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அவர் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தாயார் தெரிவித்தார்.

சினிமா துறையில் சிறந்த காமெடி நடிகைகள் மிகக் குறைவு அப்படியே சிலர் அரிதாக இருந்தாலும் அவர்களின் தவறான முடிவால் திரை துறைக்கு தான் இழப்பு என்று ரசிகர்கள் பலரும் இவரது மறைவிற்கு வருத்தம் தெரிவித்தார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …