தேவயானி வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோகமா..? – தகவலை அறிந்த நெகிழ்ந்து போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் தொண்ணூறுகளின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை தேவயானி கமல் அஜித் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த தேவயானி நீ வருவாய் என படத்தை இயக்கிய இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து கடந்த 2001ஆம் ஆண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

குடும்பத்திற்கு தெரியாமல் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டதால் நடிகை தேவயானியை அவரது ஒட்டுமொத்த குடும்பமே ஒதுக்கி வைத்தது தான் இங்கு பெரும் கொடுமை.

குடும்பத்தினரை எதிர்த்து திருமணம் செய்தவர் என்று நடிகை தேவயானியை ஒதுக்கினார்கள். காலப்போக்கில் தேவயானியின் தம்பி நகுல் தேவயானியை ஏற்றுக் கொண்டார்.. ஆனால் குடும்பத்தினரும் சம்மதம் கேட்காமல் அக்காவை திருமணம் செய்து கொண்ட இயக்குனர் ராஜகுமாரரை நகுல் ஏற்றுக்கொள்ளவில்லை.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் ஒரு மாமா என்ற முறையில் என்னிடம் நகுல் இதுவரை ஒரு வார்த்தைகூட பேசியதே கிடையாது. திருமணமான நாளிலிருந்து இது நாள் வரை என்னிடம் அவர் பேசியது கிடையாது.

காரணம் அவர் நடிகர் ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் படித்த பள்ளியில்தான் படித்தார் அப்பொழுது தேவயானி என்னை திருமணம் செய்து கொண்டது குறித்து அவர்கள் என்னைப்பற்றி கேலியாக எதையோ பேசி இருக்கிறார்கள் போல தெரிகிறது.

அதனை கேட்டதிலிருந்து என்னிடம் பேசுவதையே தவிர்த்துவிட்டார் நடிகர் நகுல். இது எனக்கு மிகப்பெரிய வேதனையாக இருக்கிறது என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இந்த பேட்டியை கேட்ட ரசிகர்கள் மனம் உருகி இருக்கின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …