பிரபல நடிகை தேவயானிக்கும் இயக்குனர் ராஜகுமாரன் என்பவருக்கும் திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. இந்நிலையில் நடிகை தேவயானியின் தம்பியும் பிரபல நடிகருமான நகுல் இன்று வரை தனது மாமா ராஜகுமாரனிடம் பேசியது கிடையாதாம்.
இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றியவர் ராஜகுமாரன். சூரிய வம்சம் திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது அந்த படத்தின் நாயகியான தேவயானிக்கும் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இந்த காதல் திருமணம் வரை சென்றது. ஒரு கட்டத்தில் இயக்குனராக அவதாரம் எடுத்தார் ராஜ்குமார். ஆனால் தான் இயக்கிய படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக தேவயானியை நடிக்க வைத்தார்.
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் நடிகை தேவயானி. ஆனால், சீரியல்களில் நடித்து வந்தார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான கோலங்கள் சீரியல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு சீரியல்.
இவருக்கு திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்ற போதும் தேவயானி கணவரிடம் அவருடைய தம்பி நகுல் பேசுவதே கிடையாதாம். இந்நிலையில் எதனால் தன்னிடம் பேசுவதில்லை என்று இயக்குனர் ராஜகுமாரன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, நடிகர் நகுல் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி அவர்கள் நடத்தி வந்த பள்ளியில்தான் படித்தார். ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யாவும் சௌந்தர்யாவும் நகுலுக்கு நெருங்கிய நண்பர்கள்.
தேவயானியை நான் திருமணம் செய்தபோது ரஜினியின் மகள்கள் நகுலை கிண்டல் செய்திருக்கலாம். அதை அவமானமாகக் கருதிய நகுல் இதுநாள்வரை தன்னிடம் பேசாமல் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
இது என்னுடைய யூகம் தானே தவிர இது உண்மையான தெரியவில்லை. ஆனால், திருமணம் ஆனது முதல் நடிகர் நகுல் என்னிடம் பேசியது கிடையாது என்று கூறியிருக்கிறார் ராஜகுமாரன்.