நடிகர் சிலம்பரசன் 40 வயதுகளை கடந்தும் முரட்டு சிங்கிளாக தான் இருக்கிறார். சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று சில மாதங்களுக்கு முன் அவரது அம்மா உஷா ராஜேந்தர் கூறியது சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இப்போது தேசிங்கு பெரியசாமி படத்தில், கமல்ஹாசன் படத்தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் சிம்பு பிஸியாக இருந்து வருகிறார். மாநாடு படம் பெரிய வெற்றி பெற்ற நிலையில், அடுத்து சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம் ஓரளவுதான் வரேவற்பை பெற்றது.
இந்நிலையில், மாடலிங் துறையில் இருந்து சினிமாத்துறைக்கு வந்துள்ள நடிகை தேவயானி ஷர்மா என்பவர், நடித்தால் சிம்புவுடன் மட்டுமே நடிப்பேன். அதுதான் என் வாழ்நாள் லட்சியம் என்று சொல்லி வருவது, சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ள தேவயானி ஷர்மா, மாடலிங் துறையிலும் இருக்கிறார். தமிழில் சைத்தான், சேவிங் த டைகர்ஸ் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ,நடிகைகளில் கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவிதான் எனக்கு மிகவும் பிடித்தவர் என்று சொல்லும் அவர், என்னுடைய ரோல் மாடலும் அவர்கள்தான் என்கிறார்.
இதற்கிடையே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள தேவயானி ஷர்மா, சாதாரண நடிகையாக இல்லாமல், என் நடிப்பாற்றல் அனைத்தையும் வெளிப்படுத்தும் சிறந்த கேரக்டர்களில் நடிக்கவே விரும்புகிறேன். நடிகர் சிம்புவுடன் நடிக்க மிகவும் ஆசைப்படுகிறேன். நடித்தால் அவருடன் தான் நடிக்க வேண்டும் என்பதே என் வாழ்நாள் லட்சியம் என்றும் கூறியிருக்கிறார்.
இது சிலம்பரசன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஒரு நடிகை, சிலம்பரசனுடன்தான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது சந்தோஷமாக இருந்தாலும், சிலம்பரசனை தான் திருமணம் செய்வேன் என எந்த நடிகையாவது பிடிவாதம் பிடித்தால் நன்றாக இருக்குமே, என ரசிகர்கள் பலரும் புலம்பி வருகின்றனர்.