பாக்கி வந்ததால்… தனுஷ் பார்வை வாத்தி மேல் திரும்புமா? வாங்க பார்க்கலாம்…!

ஆங்கிலம், பிரன்ஸ், ஹிந்தி, தமிழ் என்று பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கும் தனுஷ் தெலுங்கில் அறிமுகமாகும் படம் தான் சார்.

 இந்தப் படமானது தமிழில் வாத்தி என்ற பெயரில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்ற செய்தி வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து இன்று முதல் சிங்கிளாக தனுஷ் எழுதிய வா வாத்தி பாடல் வெளியாக உள்ள நிலையில் வாத்தி படத்தின் வெளியிட்டு தேதி பற்றிய அறிவிப்பு வெளியான நிலையில் இருந்தே அந்த படத்தை பற்றி எந்த அக்கறையும் தனுஷ் காட்டவே இல்லை என்ற ஒரு செய்தி உள்ளது.

 இந்த கம்பிளைண்டுக்கு காரணம் இவர் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் அதன் பிறகு வெளியான நானே வருவேன் படங்களை மட்டுமே அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

அதுமட்டுமல்லாமல் வாத்தி படம் பற்றிய அப்டேட்டுகள் தீபாவளி சமயத்தில் வெளிவந்த போதும்  அந்தப் படம் பற்றிய சிங்கிள் அறிவிப்புகளை இவர் வெளியிடாமல் இருந்தது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இதனை அடுத்து இவர் நேற்று ஜிவி பிரகாஷ் உடன் இருக்கும் முதல் சிங்கிள் பற்றிய ஒரு வீடியோவை வெளியிட்டு தன் அப்டேட்டை கொஞ்சம் லேட்டாக வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் புறக்கணிக்க காரணம் என்ன என்பது நேற்று தான் சற்று லீக் ஆனது. அதற்குக் காரணம் என்னவென்றால் இந்தப் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளத்தில் 15 கோடி வரை சம்பள பாக்கி வைத்திருந்தார்களாம்.

அதில் 10 கோடியை தந்து விட்டதாகவும் மீதி தொகையை பட வெளியீட்டுக்கு முன்பாக தருவதாக அந்த தயாரிப்பு நிறுவனம் சொன்னதால்தான் தனுஷ் வார்த்தை ப்ரோமோஷனல் தற்போது களம் இறங்கி இருக்கிறாராம்.

 அட எவ்வளவு பெரிய ஆட்கள் என்றாலும் பாக்கியை வசூல் செய்த பின்பு தான் வாத்திக்கான கதவை திறந்து விட்டிருக்கிறார், இவர் என்று இவரது ரசிகர்களே இவரை ஒரு மாதிரியாக கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

அதே நேரம் யாராக இருந்தாலும் தாயுக்கும் சேய்க்கும் வயிறும் வேறு வேறு என்பார்கள் அல்லவா அதுபோல பண விஷயத்தில் கராராக இருந்தால்தான் இந்த உலகில் பிழைக்க முடியும் என்பதை தனுஷ் மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டி இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …