நடிகர் தனுஷ் படமான வாத்தி படத்தின் முதல் பாடல் வரும் நவம்பர் 10-ல் வெளியாகுமா?

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கியின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும்  திரைப்படம் தான் வாத்தி இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளரான நாக வம்சி தயாரித்து வருகிறார்.

 இந்தப் படம் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளிவர உள்ளது தமிழில் வாத்தி என்ற பெயரையும் தெலுங்கில் சார் என்ற பெயரும் இதற்கு வைக்கப்பட்டுள்ளது.

 சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு எதிர்பார்ப்பையும் எகிற விட்டிருக்கிறது.

 இந்நிலையில் இந்த படத்திற்காக நடிகர் தனுஷ் எழுதிய வாத்தி திரைப்படத்தின் முதல் பாடலானது வரும் நவம்பர்  பத்தாம் தேதி வெளியாகும் என போஸ்டர் மூலம் பட குழு அறிவித்துள்ளது.

ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எந்த போஸ்டரை ரசிகர்கள் தற்போது வைரலாக பரவ விட்டு இருக்கிறார்கள். இதுக்கிடையில் வாத்தி திரைப்படமானது வருகின்ற செப்டம்பர் இரண்டாம் தேதி திரை அரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இது போன்ற இந்த அறிவிப்பால் ஏக குஷியில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்தப் பாடல் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் ரசிகைகள் தற்போது தங்களுக்குள் பட்டிமன்றங்களை நடத்தி வருகிறார்கள்.

 இன்னும் மூன்று நாட்களில் இதன் தரம் மற்றும் பாடல் வரிகள் எப்படி உள்ளது என்பதை தெரியக்கூடிய நிலையில் அவர்கள் மிகுந்த ஆவலோடு இதுபோன்ற பட்டிமன்றங்களில் ஈடுபடுவதை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள்.

மேலும் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை திருச்சிற்றம்பலம் படத்தில் கொடுத்து இருக்கக்கூடிய தனுஷ் இந்த பாடலையும் அது போலவே அவருக்கு அமையும் என்று கோடம்பாக்கம் முழுவதுமே பேசிக் கொள்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …