“ஒன்னு போதும் நின்னு பேசும்..” – கவர்ச்சி உடையில் சொக்க வைத்த ராஜா ராணி பட நடிகை..!

இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியாகி ஒரே திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய திரைப்படமான ராஜா ராணி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தொடர்ந்து ஏழாம் அறிவு காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான இவர் இடையில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார்.

கர்நாடகாவை சேர்ந்த இவர் IPL போட்டியின் போது CSKவிடம் RCB தோற்ற விரக்தியில்.. நானும் கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று.. சென்னை மக்களே நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீர்கள்.. நாங்கள் கொடுக்கிறோம்.. மின்சாரத்திற்காக பிச்சை எடுக்கிறீர்கள்.. நாங்கள் கொடுக்கிறோம் உங்களுடைய மக்கள் எங்களுடைய அழகான நகரங்களை வந்து ஆக்கிரமிப்பாளர்கள் இருப்பதற்கு இடம் கொடுத்தால் படுப்பதற்கு இடம் கேட்கிறார்கள்.

எங்களுடைய இரக்கத்தால் நீங்கள் அரையிறுதிக்கு முன்னேறி விடுவீர்கள்.. நாங்கள் அதற்கு அனுமதி கொடுத்து உள்ளோம் நீங்கள் பிச்சை எடுக்கிறீர்கள்.. நாங்கள் கொடுக்கிறோம்.. இப்படியான வார்த்தைகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் தன்யா பாலகிருஷ்ணன்.

இது பெரும் சர்ச்சையாக வெடித்தது ரசிகர்கள் மத்தியில் இவருடைய பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகி போனது. தமிழ் சினிமாவில் நடித்து கொண்டு தமிழர்களின் பணத்தில் வாழ்ந்து கொண்டு தமிழர்களை இப்படி இழிவு பேசுவீர்களா..? இதை நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கனுமா…? என்று பல கருத்துக்கள் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டது.

மேலும் கர்நாடக மக்களும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். தங்களுடைய அண்டை மாநிலத்தவர் இப்படி நீங்கள் அவமதிப்பது சரியாகாது. இப்படி பேசுவதால் தமிழ் மக்களை நீங்கள் இழிவுபடுத்தவில்லை.. ஒட்டு மொத்த கன்னட மக்களை நீங்கள் இழிவு படுத்தி உள்ளீர்கள். உங்களுடைய இந்த செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது போன்ற பல குரல்களை கர்நாடக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணையத்தில் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

அப்போது இவர் கமிட்டாகி இருந்த சில திரைப்படங்களில் இருந்து இவரை விளக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அதேபோல தமிழக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் இவரை தாங்கள் புக் செய்த படத்தில் இருந்து நீக்கினார்கள்.

தற்போது மீண்டும் தமிழில் நடித்து வருகிறார் என்பது வேறு கதை. ஆனால் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க முயற்சி செய்து வருகிறார்.

ரசிகர்களின் கவனமும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கவனமும் நீ ஒரு பக்கம் திரும்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …