” இந்த திசையில் பீரோவை வையுங்க..!” – காசு கொட்டோ கொட்டு என கொட்டும்..!

வாழ்க்கையில் சகல வெற்றிகளையும் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்று துடிப்பவர்கள் வீடு கட்ட வேண்டும் என்பதையும் மனதில் வைத்திருப்பார்கள்  அப்படி அவர்கள் சொந்தமாக ஒரு வீட்டை கட்டி இருந்தாலும் இல்லை, வாடகை வீட்டில் குடி இருந்தாலும் அவர்களது செல்வங்களை சேமித்து பாதுகாப்ப வாங்கி வைக்கும் பொருள்தான் பீரோ.

இந்த பீரோவை நீங்கள் வைக்கும் திசையை பொறுத்து உங்களது செல்வாக்கு மற்றும் செல்வ வளர்ச்சி கூடும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா… ஆனால் அது முற்றிலும் உண்மைதான்.

 எவ்வளவுதான் முயற்சி செய்து வியாபாரம் செய்தாலும், அதில் லாபம் இல்லை வீட்டில் செல்வம் தங்குவதே இல்லை என்ற பிரச்சனையில் இருக்கக்கூடியவர்கள் நீங்கள் என்றால் உங்கள் வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யமும் கிடைத்து மகாலட்சுமியின் பார்வை தீர்க்கமாக இருந்து பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால், உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பீரோ மற்றும் லாக்கர்களை எந்த பகுதியில் வைத்தால் உங்களுக்கு பண மழை வரும் என்பதை இப்போது தெளிவாகக் கூறுகிறோம்.

முதலில் நீங்கள் இருக்கக்கூடிய வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் வெளியேறி நேர்மறை ஆற்றல்கள்  அதிகமாக இருந்தால் மட்டும்தான் செல்வ நிலையை நீங்கள் அபிபிருத்தி செய்ய முடியும்.

 உங்கள் வீட்டில் நீங்கள் சம்பாதித்த பணம் நகை போன்றவற்றை பீரோவில் வைக்க அந்த பீரோவை நீங்கள் எந்த இடத்தில் வைத்தால் மென்மேலும் வளர்ச்சியடையலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

 பீரோவை வைக்க வேண்டிய திசை உங்கள் வீட்டு பீரோ தென்மேற்கு பகுதியில் இருந்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். அதாவது தெற்கு பகுதியை ஒட்டியவாறு இருக்கும்போது நீங்கள் வடக்கு நோக்கி அல்லது கிழக்குப் பக்கம் நோக்கி பீரோ கதவை திறக்க கூடிய வகையில் வைக்க வேண்டும்.

 இந்த அமைப்பில் வைக்கும் போது உங்களுக்கு பணவரவு கூடுதலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பண சேமிப்பும் உயரும். இந்த திசையில் உங்களது பீரோவை வைக்க முடியாவிட்டால் வேறு எந்த திசையில் வைப்பது என்று நீங்கள் நினைக்கலாம்.

அந்த திசையில் வைக்க முடியாதவர்கள் வடமேற்கு திசையில் மேற்குப் பக்கமாக உள்ள சுவர் அருகே கிழக்கு நோக்கி பீரோவை வைக்கலாம். இதனாலும் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து செல்வம் அதிகரிக்கும் செலவுகள் குறையும்.

 நீங்கள் இதுபோல உங்கள் வீட்டு பீரோவை வைத்துப் பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு நிதி பிரச்சனைகள் நீங்கி நிச்சியம் செல்வ வளம் ஏற்படும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …