சாபம் விட்டதால் தான் இயக்குனர் பாலா இப்படி ஆகிவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பேச்சால் பரபரப்பு…!!

தமிழ் திரையுலகை பொருத்தவரை அசைக்க முடியாத இயக்குனர்களின் வரிசையில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கக் கூடிய இயக்குனர் தான் இயக்குனர் பாலா. இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும்.

 இந்நிலையில் தற்போது தான் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்ற நிலையில் வணங்கான் திரைப்படத்தை இவர் இயக்குவதாக இருந்த நிலையில் அதில் சூரியா நடிப்பதாக இருந்தது.

ஆனால் இவரின் சில செய்கைகளாலும் முக்கியமான காரணங்களாலும் அந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிக் கொண்டதோடு அந்த படத்தை தயாரிக்க கூடிய அவரது சொந்த நிறுவனமும் அதை தயாரிக்கப் போவதில்லை என்பதை அறிவித்தது.

இதனை அடுத்து இயக்குனர் பாலா பற்றிய சில முக்கிய தகவல்களை தயாரிப்பாளரும் நடிகருமான அழகன் தமிழ்மணி கூறியுள்ளது பரபரப்பாக தற்போது பேசும் பொருளாக மாறிவிட்டது.

இந்த அழகன் தமிழ்மணி மலையாளத்தில் பல படங்களில் தயாரித்தவர்.மேலும் இவருடைய வீடு பாலாவின் ஆபீசுக்கு பக்கத்தில் இருப்பதால் அவர் இயக்கும் படத்தில் இவருக்கு வாய்ப்பு தருவதாக சொல்லி இருக்கிறார்.

அதன்படி ஆர்யாவை வைத்து இவர் இயக்கிய நான் கடவுள் படத்தில் ஆர்யாவின் தந்தை கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்தார். அந்த வகையில் இவர் இயக்குனர் பாலாவிடம் நேரடியாக வாய்ப்பு வேண்டும் என்று எதையும் கேட்கவில்லை. ஆனால் அவர்தான் இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று வற்புறுத்தி அதில் நடிக்க வைத்திருக்கிறார்.

 மேலும் நான் கடவுள் படத்தில் எனது மனைவியை அடிப்பது போல் ஒரு காட்சி இருக்கும் அதில் அந்த நடிகை என்னை மெதுவாக அடித்தாலும் பாலா சத்தம் கேட்கும் படி அடிக்க வேண்டும் என்று கூறுவார்.

இதுபோல தண்ணீருக்குள் குதிக்கும் காட்சிகளும் பலமுறை தண்ணீரில் என்னை விழ வைத்தார். அப்படி நான் குதிக்கும் போது என் கால்களில் கல்குத்தி அப்படியே காயம் ஆகிவிட்டது. அதை பற்றி எல்லாம் அவர் கவலைப்படவே இல்லை.

இந்நிலையில் படப்பிடிப்பு நடந்த போது எனது தாய் திடீரென்று இறந்து விட்டதார். அவருடைய ஈம சடங்குகளை குடும்ப வழக்கப்படி செய்ய அவர் விடவில்லை. மொட்டை அடித்து தாடியை எடுக்க வேண்டும் என்று பாலாவிடம் கேட்டதற்கு மூணு வருஷம் இழுத்தெடுச்சாச்சு இதுக்கு அப்புறமா மூணு வருஷம் ஆகணும்னா நீங்க போய் மொட்டை அடிச்சுக்கோங்க என்று  கோபத்தோடு கூறினாராம்.

 இந்த சூழ்நிலையில் நானும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் படத்துக்கு பாதிப்பு வரக்கூடாது என்று மொட்டை அடிக்கும் சடங்கை தவிர்த்து விட்டேன். இந்த நிமிடத்தில் தான் நான் வயிறு எரிந்து பாலாவுக்கு சாபம் பெற்று அதை தான் தற்போது இயக்குனர் பாலா அனுபவித்து வருகிறார் என்று கூறியிருப்பது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …