வந்துட்டேன்னு சொல்லு… திரும்ப வந்துட்டேன்னு சொல்லு … மீண்டும் நடிப்பில் களம் இறங்கி இருக்கும் இயக்குனர் பாரதிராஜா…!!

 தமிழ் மண்ணின் வாசத்தை திரைப்படம் மூலமாக உலகிற்கு எடுத்துச் சொன்ன இயக்குனர்களின் வரிசையில் பாரதிராஜா குறிப்பிடத்தக்கவர். அந்த வரிசையில் தமிழ் மண்ணின் ஈரத்தை மட்டுமல்ல, கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளையும், கலாச்சாரங்களையும், பண்பாட்டையும், பக்குவமாக தன்னுடைய படங்களில் வெளிப்படுத்தியவர்.

மேலும் மண்வாசனை ததும்ப பாசப்பினைப் போடு இவர் எடுத்த படங்கள் ஏராளம். இதனால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் ஏராளமாக உள்ளது. திரைப்படங்களை இயக்கியதோடு இல்லாமல் பாரதிராஜா கல்லுக்குள் ஈரம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக இருந்தார்.

 இதன் பிறகு டைரக்ஷனில் மட்டுமே முழுமூச்சாக செயல்பட்டு இருந்த இவர் முதல் மரியாதை படத்தின் இரண்டாம் பாகத்தை கடைசியாக இயக்கியனார்.

அந்தப் படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட ரோலில் பக்காவாக நடித்து அசத்தினார். இதனை அடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர நடிப்பதில் பிஸியாகி விட்டார்.

 இதனை அடுத்து அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுசுக்கு தாத்தாவாக அற்புதமான தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் இவர் தங்க பச்சான் இயக்கும் மேகங்கள் கலைகின்றன என்ற படத்திலும் சுசீந்திரன் இயக்கக்கூடிய  படத்திலும் நடிக்க இருந்த நிலையில் திடீர் என முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

 இதனை அடுத்து அதற்கான சிகிச்சைகள் மேற்கொண்டு விட்டு சென்னையில் இருக்கும் தனது இல்லத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்த இவர் தற்போது பூரண உடல்நலம் பெற்று சினிமாவில் நடிக்க கூடிய அளவிற்கு தேர்வு விட்டார்.

 இதனை அடுத்து தற்போது தங்கர்பச்சன் இயக்கும் மேகங்கள் கலக்கின்றன படத்தின் படப்பிடிப்புக்காக 130 நாட்கள் காத்திருந்த நிலையில் தற்போது அந்த படப்பிடிப்பில் இவர் கலந்து கொண்டு நடிக்க துவங்கி இருக்கிறார்.

 இந்தப் படத்தில் யோகி பாபு உடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் தற்போது படம் பிடிக்கப்பட்டு வருகிறது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இவர் விரைவில் கமிட் ஆகிய இருக்கக்கூடிய அனைத்து படங்களிலும் நடித்து மீண்டும் ஒரு குறிப்பிட்ட படத்தை இயக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …