நான் சூடான மோகினி..! கை தீண்டாத மாங்கனி..! – சோஃபாவில் குத்த வைத்து.. கொள்ளை அழகில் திவ்யதர்ஷினி..!

பிரியதர்ஷினி, கடந்த பல ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வருகிறார்.சிறுமியாக பல படங்களில் பிரியதர்ஷினி நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக தாவணி கனவுகள் மற்றும் காவல் கைதிகள், நாகம், நாகதேவதை, குற்றவாளிகள், இதயக்கோவில், உயிரே உனக்காக, இதயத்தை திருடாதே போன்ற படங்களில் பிரியதர்ஷினி நடித்திருந்தார்.

பிடி என சுருக்கமாக, பிரியதர்ஷினி அழைக்கப்படுகிறார். இவரது தங்கை தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரும் டிவிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக, மக்கள் மத்தியில் மிக பிரபலமானவர். சினிமா விழாக்கள், விருது விழாக்கள், கலை நிகழ்ச்சிகளில் அக்கா– தங்கை இருவருமே நிகழ்ச்சித் தொகுப்பாளர்களே பங்கேற்று வருகின்றனர்.

priyadarshini

தற்போது, பிரியதர்ஷினிக்கு இவருக்கு 44 வயது ஆகிறது. சென்னை தான் சொந்த ஊர். சகோதரர் பிஸினஸ் நடத்தி வருகிறார். பிரியதர்ஷினிக்கு நடனத்தில் அதிக விருப்பம் கொண்டவர். வீட்டில் இருக்கும் பல நேரங்களில், இவருக்கு பிடித்தமான இசையில், நடனமாடுவது இவரது முக்கியமான பொழுதுபோக்காக உள்ளது. மேலும், வெளியூர் பயணங்கள், நல்ல இசை கேட்பது, நண்பர்களுடன் அரட்டை, புத்தகம் வாசிப்பதிலும் பிரியதர்ஷினி அதிக ஆர்வம் காட்டுகிறார்.

priyadarshini

இதுவரை, ஆயிரம் மேடைகளுக்கு மேல் பிரியதர்ஷினி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணி செய்திருக்கிறார்.தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசும் திறன் படைத்த பிரியதர்ஷினி சிறந்த நடனக்கலைஞர்.சிறுவயதில் பிரியதர்ஷினி, குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார்.

ஆனால், வளர்ந்த பின்பு, அதிகமாக படங்களில் நடிக்கவில்லை. ஏனெனில், சினிமாவில் நடிக்க, வாய்ப்புகளை பெற, அடுத்தடுத்த படங்களில் நடிக்க, கதாநாயகியாக நடிக்க வரும் நடிகைகள், கட்டாயம் கவர்ச்சி காட்ட வேண்டிய நிலை இருந்ததால், பிரியதர்ஷினி சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டவில்லை என்று தெரிய வருகிறது.ஆனால், டிவி நாடகங்களில் நடிக்க அத்தகைய நெருக்கடியான நிலை எதுவும் இல்லை.

priyadarshini

அதனால், டிவி சீரியல்களில் பிஸியாக உள்ள நடிகைகளில் பிரியதர்ஷினியும் ஒருவர். அக்னி பரீட்சை, விழுதுகள், கனவுகள் இலவசம், கோலங்கள், வசந்தம், மை டியர் பூதம், விசாலம், ரேகா ஐபிஎஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இதில், பல சீரியல்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். குறிப்பாக, பெண்கள் மத்தியில் இவருக்கு நல்ல இமேஜ் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

priyadarshini

மேலும், சுபயாத்ரா, கல்கி, புலி வருது ஆகிய படங்களில் நடித்திருந்தார் பிரியதர்ஷினி. ஆனால், சின்ன கேரக்டர்களில் மட்டுமே நடித்திருக்கிறார். தற்போது எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் இவருக்கு, ரசிகர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரியதர்ஷினி தொடர்ந்து, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். அதற்கு, லைக்ஸ் குவிகிறது.

priyadarshini

துவக்க காலத்தில், மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று பிரியதர்ஷினி நடனமாடி உள்ளார். அப்போது, ஒவ்வொரு ரவுண்டு நடனப்பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு, தங்க நாணயம் பரிசு வழங்கப்படும்.

அந்த வகையில், அதிகமுறை தங்க நாணய பரிசுகளை வென்ற பிரியதர்ஷினி, ஒவ்வொரு முறை வெற்றி பெறும்போதும், அந்த தங்க நாணயத்தை நகையாக மாற்றி, காது குத்தி புதிய நகையை மாட்டிக்கொள்வாராம். அப்படி ஏகப்பட்ட முறை இதற்காக காது குத்திக் கொண்டிருக்கிறார் பிரியதர்ஷினி.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …