வீட்டில் நீங்கள் சம்பாரிக்கும் பணம் நிலைத்து நிற்க வேண்டுமா? அப்ப இத கட்டாயம செய்ய கூடாது..!

ஓடி ஓடி உழைத்தாலும் நீங்கள் சம்பாதித்த பணம் உங்கள் வீட்டில் நிலைத்து இல்லை என்ற கவலையில் இருக்கிறீர்களா? அப்படி என்றால் அந்த பணம் நிலைத்து இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று இதுவரை யோசித்து இருக்கிறீர்களா?

உங்கள் பணம் எப்போதும் உங்கள் வீட்டில் நிலைத்திருக்க லட்சுமி கடாட்சம் மற்றும் லட்சுமியின் பார்வை அவசியம் தேவை.

 அந்த மகாலட்சுமியின் பார்வை அவசியம் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் கட்டாயம் உங்கள் வீட்டில் எந்த இரண்டு செயல்களை கட்டாயம் செய்யவே கூடாது. அப்படி நீங்கள் செய்தால் வீட்டில் பணம் நிலைத்து நிற்காது.

வீட்டில் பணம் நிலைத்து நிற்க நீங்க செய்ய கூடாதது எது தெரியுமா?

1.மகாலட்சுமிக்கு உகந்த நாளான செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் வீட்டில் நெய்யை உருக்குவதை அறவே நிறுத்தி விட வேண்டும். அவ்வாறு வெண்ணெய், நெய்யை உருக்கும் போது நெய்யில் வாசம் செய்யக்கூடிய மகாலட்சுமி உருகி வெளியே சென்று விடுவார் என்று சாஸ்திரங்கள் கூறியுள்ளது.

 எனவே நீங்கள் கண்ணும் கருத்துமாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீடுகளில் வெண்ணையையோ, நெய்யோ உருக்கி பயன்படுத்தாதீர்கள்.

2.மேலும் உங்கள் வீட்டுக்கு வரக்கூடிய விருந்தினர்களுக்கு உங்களது சமையல் உபசரிப்பில் கட்டாயம் பாகற்காயை தவிர்க்க வேண்டும். அவ்வாறு பாகற்காயை நீங்கள் ஏதாவது ஒரு பண்டமாக சமைத்துக் கொடுக்கும் போது வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியேறி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் கசப்பு நிறைந்த இந்த பண்டத்தை வருவோருக்கு நீங்கள் கொடுக்கக் கூடாது.

இந்த இரண்டு தவறுகளையும் நீங்கள் உங்கள் வீட்டில் செய்யாமல் இருந்தால் கட்டாயம் நீங்கள் சம்பாதிக்கும் பணம் உங்கள் வீட்டில் நிலைத்து நிற்கும்.

மேலும் லட்சுமியின் பார்வை தீர்க்கமாக இருப்பதினால் மேலும் மேலும் சம்பாதித்து பணத்தை சேமிக்க நீங்கள் முயற்சி செய்வீர்கள்.இப்போது உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும் ஏன் உங்கள் வீட்டில் பணம் தங்கவில்லை என்று. நீங்கள் செய்யக்கூடிய அந்த தவறை திருத்திப் பாருங்கள் கட்டாயம் முன்னேறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …