“பிரிட்ஜில் இத சேர்த்தி வைத்தா பொருட்கள் கெட்டு போகுமா..! – இது தெரியாம போச்சே..!!

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நாம் பொருட்களை வாங்கி பிரிட்ஜில் சேமித்து வைத்துக் கொள்கிறோம். அப்படி சேமித்து வைக்கும் போது சில பொருட்களை ஒன்றாக வைப்பது மூலம் அந்த பொருள் கெட்டுப் போவதோடு மட்டுமல்லாமல் நீங்கள் கூட வைத்திருக்கும் பொருளும் கெட்டுப் போகிறது.

இந்த உண்மை உங்களுக்கு தெரியுமா? அப்படி பிரிட்ஜில் எந்த எந்த பொருட்களை சேர்த்து வைக்கக் கூடாது என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

பிரிட்ஜில் சேர்த்து வைக்க கூடாத பொருட்கள்

ஆப்பிள், அத்திப்பழம், திராட்சைப்பழம் போன்ற பழங்களோடு ப்ரோக்கோலியை சேர்த்து வைக்கக் கூடாது. அப்படி சேர்த்து வைக்கும் போது மற்ற பொருள்கள் கெட்டுவிடுவதோடு ப்ரோக்கோலியும் கெட்டுப் போகும். இதற்கு காரணம் எத்திலீன் உணர்திறன் அதிகமாக உள்ளது தான். எனவே இந்த பொருட்களை சேர்த்து வைக்காதீர்கள்.

தர்பூசணி, திராட்சை, ஆப்பிள் போன்ற பழங்கள் எத்திலீன் உள்ள பழங்களை சேர்த்து வைத்தால் அவை விரைவில் கெட்டுப் போகும். எனவே திராட்சை, தர்பூசணி, ஆப்பிளோடு இணைந்து காய்கறிகளை சேர்த்து வைக்காதீர்கள்.

சுரைக்காயை, ஆப்பிள், திராட்சை, பேரிக்காய் போன்ற பழங்கள் உள்ள பகுதியில் வைப்பதின் மூலம் சுரைக்காய் விரைவில் அழுகிவிடும்.

முட்டை கோஸ் எப்போதும் ஃப்ரெஷ்ஷாக இருக்க காற்று அவசியம் தேவை. எனவே நீங்கள் இதனுடன் பழங்களை இணைத்து வைக்காமல் இருந்தால் முட்டைக்கோஸ் எப்போதும் பிரஷ்ஷாக பிரிட்ஜில் இருக்கும் இருக்கும்.

தக்காளியோடு இணைத்து வெள்ளரிக்காயை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் வெள்ளரி காய்களின் ஈரப்பதத்தை வெளியிடுவதால் தக்காளி எளிதில் கெட்டுப் போகும்.

எனவே மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் உங்கள் மனதில் வைத்துக் கொண்டு உங்கள் ஃப்ரிட்ஜில் இந்த பொருட்களை தனித்தனியாக வைப்பதின் மூலம் நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும்.

நீங்களும் இந்த குறிப்புகளை ஃபாலோ செய்து பாருங்கள். கட்டாயம் உங்களுக்கு நன்மை ஏற்படும். அப்படி உங்களுக்கு நன்மை கிடைக்கும் பட்சத்தில் அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …