மீன்கள் அதிகமாக கிடைக்கும் பட்சத்தில் அதில் உப்பினை கலந்து கருவாடாக்கி பல காலம் வைத்து உண்கிறோம். மாமிச வகைகளில் கொழுப்பு குறைந்தவை என்றால் மீன் மற்றும் கருவாடு தான்.
பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பிரச்சினைகளான நீர்ப்பை, சினைப்பை, கருப்பை போன்ற பிரச்சினைகளைச் கருவாடு சரி செய்வதாய் உள்ளது.
கருவாட்டினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். மேலும் உடல் நலம் குன்றியவர்கள் கருவாட்டுக் குழம்பினை எடுத்துக் கொண்டால், உடல் நலம் தேறுவார்கள்.
கிராமப் பகுதிகளில் செய்யக்கூடிய கருவாடு மசாலா பெரியல் ஊருக்குள் இருக்கும் அனைவரையும் சுண்டி இழுக்க கூடிய சுவையோடு இருக்கும்.
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் இந்த கருவாட்டு மசாலாப் பொரியல் செய்ய
தேவையான பொருட்கள்
- துண்டு துண்டாக நறுக்கிய கருவாடு 100 கிராம்
- தக்காளி 1
- சின்ன வெங்காயம் 50 கிராம்
- பூண்டு 10 பல்
- வரமிளகாய் 10
- தேங்காய் 2 துண்டு
- மஞ்சள்தூள்
- சிறிதளவு எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு.
தாளிக்க:
வெந்தயம், சோம்பு, சீரகம் சிறிதளவு.
செய்முறை
முதலில் கருவாட்டை மண் இல்லாமல் நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் வெங்காயம் தக்காளி பூண்டு இவற்றை மிக நன்றாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
மிளகாய், தேங்காய், சோம்பு, உப்பு இவற்றை மிக நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும். அம்மியில் அரைத்தீர்கள் என்றால் சுவை கூடுதலாக இருக்கும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெந்தயம், சோம்பு, சீரகம் ஆகியவற்றை தாளித்து அரைத்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், தேங்காய் இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இந்த கலவை நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் விழுதைப் போட்டு அதனுடன் அரை டம்ளர் தண்ணீரை விட்டு கருவாட்டையும் போட்டு கெட்டியாக வந்ததும் இறக்க வேண்டும்.
இப்போது சுவையான கருவாடு மசாலா பெரியல் தயார்.