பெண்களை தாய்மை ஸ்தானத்திற்கு அழைத்துச் செல்கின்ற கர்ப்ப காலத்தில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட பானங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அப்படி நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாத பானங்கள் எது என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
கர்ப்பமாக இருக்கும் போது தவிர்க்க வேண்டிய பானங்கள்
ஒவ்வொரு பெண்களுக்கும் மறு பிறவியை தரக்கூடிய இந்த கர்ப்ப காலம் மிகவும் ஒரு சிறப்பான காலம் என்று கூறலாம். இந்த காலத்தில் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான அத்தியாவசியமான உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்படி எடுக்கும் போது சில உணவுப் பொருட்களை உங்கள் கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளாமல் தவிர்க்க தவிர்த்து விடுவது மிகவும் அவசியமானது.
அந்த வரிசையில் நீங்கள் கர்ப்ப காலத்தில் மதுபானத்தை எடுத்துக் கொள்வது குழந்தையின் குறை பிரசவத்திற்கும், பிறப்பு குறைபாடுகளுக்கும், மூளை வளர்ச்சியை சிதைப்பதற்கும் உறுதுணையாக இருக்கும் என்பதால் நீங்கள் மதுபானம் அருந்தக் கூடாது.
கடைகளில் விற்கக்கூடிய எனர்ஜி ட்ரிங்க்ஸ் என்று கூறப்படும் ஆற்றல் பானங்களை தவிர்த்து விடுதல் நல்லது. இதில் காஃபின் அதிகமாக இருப்பதால் சிசுவின் வளர்ச்சியை பாதிக்கும்.
மேலும் பதப்படுத்தப்படாத பாலில் அதிக அளவு பாக்டீரியா தொற்று நிறைந்திருக்கும். எனவே பதப்படுத்தப்படாத பாலை பயன்படுத்துவதையோ, பருகுவதையோ தவிர்த்து விடுங்கள்.
கர்ப்ப காலத்தில் பதப்படுத்தப்பட்ட பழ சாறுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கடையில் பதப்படுத்தாத நிலையில் நீண்ட நாட்களாக பாட்டில்களில் அடைத்து வைத்திருக்கும் குளிர்பானங்களையோ பல சாறுகளையோ குடிக்க வேண்டாம்.
செயற்கை இனிப்புகளைக் கொண்டு உண்டாக்கப்பட்ட பானங்களை கர்ப்பிணிப் பெண்கள் முழுமையாக தவிர்க்க வேண்டும். குறிப்பாக டயட் கோக், மற்றும் டயட் சோடாவை கூறலாம்.
எனவே மேலே கூறப்பட்டு இருக்கக்கூடிய முக்கியமான பானங்களை நீங்கள் தவிர்த்து விட்டு இயற்கையாக கிடைக்கக்கூடிய நீர்,பால், மூலிகை தேநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியமாக இருக்கும்.