என்ன கன்றாவி இது..? – நைட் பார்ட்டியில்.. டூ பீஸ் உடையில்.. தொகுப்பாளினி போதை ஆட்டம்..!

திருமணம் செய்து சில வருடங்களிலேயே விவாகரத்தும் செய்து விட்டு சுதந்திரப் பறவையாக சுற்றித்திரிந்த பிரபல தொகுப்பாளினி சமீபகாலமாக தன்னுடைய வாழ்க்கை தடத்திலிருந்து மாறி சென்று கொண்டிருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

காரணம் சினிமாவில் தனக்கு நண்பர்களாக இருக்கும் சினிமா பிரபலங்கள் மற்றும் நண்பர்களுடன் அடிக்கடி பார்ட்டி மற்றும் மதுவிருந்து ஆகியவற்றின் கலந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் தொகுப்பாளினி என்கிறார்கள்.

வார இறுதி நாட்களில் என்று வந்து விட்டாலே போதும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபல சினிமா நடிகர் மற்றும் அரசியல் பிரமுகர் ஒருவரின் பங்களாவில் நடக்கும் போதை பார்ட்டியில் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள் என்றும் அந்த பார்ட்டியில் கடந்த சில மாதங்களாக அதீத ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார் தொகுப்பாளினி என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இந்த பங்களா பிரபல அரசியல் பிரமுகரின் பங்களா என்பதால் இங்கே நடக்கும் விஷயங்கள் எதுவும் வெளியே தெரியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் இந்த பங்களா இருப்பதாகவும் இங்கே நுழைவது என்பது நடக்காத காரியம் என்றும் கூட விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அப்படி பாதுகாப்பாக இருக்கும் இந்த இடத்தில் பிரபல தொகுப்பாளினி செய்யும் அட்டூழியங்கள் தான் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு பார்ட்டி நடக்கும் விஷயமே சமீபத்தில் அந்த அரசியல் பிரமுகரும் நடிகருமான கருப்பு பாஸ் நடிகர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தான் தெரியவந்தது.

போதையில் வீடியோவை பதிவேற்றி விட்டு.. மறுநாள் காலையில் அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டார் கருப்பு பாஸ். இதனை பார்த்த ரசிகர்கள் இவரா இப்படி என்று கேட்கும் அளவுக்கு சென்றார்கள்.

இந்த வீடியோவில் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் போதையில் திளைத்தபடி ஆட்டம் போட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இருப்பது வெளியாகி வைரல் ஆனதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அந்த வீடியோவில் தொகுப்பாளினி டூ பீஸ் உடையில் போதை ஆட்டம் போட்டதை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து தான் போய் கிடக்கிறார்கள். ஒரு காலத்தில் சிறு சிறு பிரச்சனைகள் என்றாலும் கூட அதனை பேசிப்பேசி பெரிய பிரச்சனையை போல் காட்டிய நடிகர்கள் மற்றும் நடிகைகள் தற்போது பெரிய பெரிய பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் போதும் அதனை கண்டுகொள்ளாமல் இப்படி போதை பார்ட்டியில் திளைத்து வருகிறார்களே.. என்று மனதுக்குள் பொறுமி வருகிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி தொகுப்பாளினியின் போதை ஆட்டம் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது. இவரா இப்படி ஆட்டம் போடுகிறார் என்று வாயைப் போல இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த கூத்து எல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் கோடம்பாக்க வட்டாரங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …