“இப்படி இருந்தா எல்லாருக்குமே அது தெரிஞ்சிடுமே..” வாய் தவறி உளறி கொட்டிய ஈஷா ரெப்பா..

ஹைதராபாத்தில் வளர்ந்த ஈஷா ரெப்பா தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர். முதுகலை வணிக மேலாண்மை பட்டப்படிப்பை முடித்த இவர் கல்லூரியில் படிக்கும் போதே விளம்பர மாடலாக செயல்பட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து இவர் இயக்குனர் இந்திரகண்டி மோகன கிருஷ்ணனிடம் இருந்து ஓர் அழைப்பை பெற்றிருக்கிறார். 2012 ஆம் ஆண்டு லைப் இஸ் பியூட்டிஃபுல் என்ற திரைப்படத்தின் அறிமுகமானார்.

நடிகை ஈஷா ரெப்பா..

இந்த திரைப்படமானது தென்னாபிரிக்காவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் 2017-இல் வெளி வந்த அமி துமி என்ற காதல் நகைச்சுவை திரைப்படத்தில் இவர் நடிப்பை பார்த்து வியந்து போன ரசிகர்கள் இவரை கனவு கன்னியாகவே நினைத்தார்கள்.

அடுத்து இரண்டு விருதுகளை இந்த படம் அவருக்கு பெற்று தந்தது. இதனை அடுத்து மலையாள திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. மேலும் இவர் பிகில் திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்து தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அத்தோடு தமிழில் ஓய் என்கிற படத்தில் ஹீரோயினியாக நடித்த இவருக்கு பெரிய வரவேற்பு தமிழில் கிடைக்கவில்லை. அது போலவே பிகில் திரைப்படத்திற்கு பிறகு எந்த பட வாய்ப்புகளும் தமிழில் கிடைக்காத காரணத்தால் அக்கட தேசத்திற்கே திரும்பிவிட்டார்.

உளறிக் கொட்டிய விஷயம்..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடிப்பார்.

ஈஷா ரெப்பா போடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதை கவரும் படி இருக்கும்.

சமீபத்திய பேட்டியில் இளம் நடிகை ஈஷா ரெப்பா உங்கள் கைபேசியில் எந்த விஷயத்தை நீங்கள் ரகசியமாக வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது வாய் தவறி உளறி கொட்டிய விஷயம் பற்றிய செய்தியை பார்க்கலாம்.

இந்தக் கேள்விக்கு ஈஷா பதிலளிக்கும் போது தன்னுடைய தொலைபேசியில் நடிகர் மகேஷ்பாபுவின் தொலைபேசி எண்ணை ஸ்டார் என்று சேமித்து வைத்திருக்கிறேன் என கூறினார். அத்தோடு சூப்பர் ஸ்டார் என்று சேமித்து வைத்தால் அது எல்லோருக்கும் தெரிந்து விடும் என்பதால் தான் வெறும் ஸ்டார் என்று சேமித்து வைத்திருக்கிறேன் எனக் கூறினார்.

இந்த விஷயத்தை கூறிய அடுத்த நிமிடமே ஐயையோ நான் வாய் தவறி உளறிவிட்டேன் இந்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்திடுமே என்று பதறிய அவர் சரி உடனே நான் வேறு பெயரை அவருக்கு மாற்றி வைத்து விடுகிறேன் என்று சமாளித்த படியே சிரித்தார்.

தற்போது இந்த விஷயம் தான் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ஈஷா ரெப்பா வாய் தவறி உளறிக் கொட்டிய விஷயம் இது தானா? என்று ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள்.

இவரைப் போலவே பல நடிகைகளும் சில நடிகர்களின் எண்களை எந்த மாதிரி கோடிங்கில் வைப்பது ஒன்றும் புதிது இல்லை. எனினும் அப்படிப்பட்ட நடிகரின் பெயரை வெளிப்படையாக சொல்லியதோடு மட்டுமல்லாமல் அதை என்ன பெயரில் சேவ் செய்து வைத்திருக்கிறார் என்பதை கூறியது தான் ஆச்சரியமான விஷயம் எனக் கூறியிருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …