வாடி என் தங்கசிலை நீ இல்லாட்டி நான் ஒன்னும் இல்ல என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுற்றிசுற்றி பாடல் பாடிய ஹீரோயின் நம்முடைய ஈஸ்வரி ராவ். இவர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சமகால ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு மனைவியாக தன்னுடைய ஆத்மார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், தன்னுடைய 18வது வயதில் இருந்தே திரையுலகில் ஹீரோயினாக பல படங்களில் நடித்துள்ள இவர் ஆரம்ப காலத்தில் தன்னுடைய நிறம் மற்றும் தோற்றத்தால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து உள்ளார்.
அந்த சமயம் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருந்தும் இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்த சில படங்களிலும் படு கிளாமரான காட்சிகளில் இவர் நடித்திருப்பார். அதிலும் முதல் படத்திலேயே நீச்சல் உடையில் சில காட்சிகளில் தோன்றி இருந்தார்.
கவிதை பாடும் அலைகள் என்பதுதான் இவருடைய முதல் திரைப்படம் இந்த திரைப்படத்தில் நீச்சலுடையில் சில காட்சிகளில் நடித்து அன்றைய சினிமா ஹீரோயின்களுக்கு பெரும் சவாலாக இருந்தார் நடிகை ஈஸ்வரி ராவ்.
பல வாய்ப்புகள் இவருடைய நிறத்தால் மற்றும் தோற்றத்தால் நிராகரிக்கப்பட்டாலும் தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார்.
தமிழில் குறிப்பிடும்படியாக நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான சிம்மராசி, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான சுள்ளான், தவசி, நாளைய தீர்ப்பு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தது ரசிகர்களை அவர் பக்கம் ஈர்த்தது.
சினிமாவில் தனக்கென ஒரு இடம் வைத்திருந்த நடிகை ஈஸ்வரிராவ் ஆரம்பகாலத்தில் டூ பீஸ் உடையில் பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஈஸ்வரிராவ் இப்படி போஸ் கொடுத்திருப்பது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.