“வரும் ஆனா…. வராது” காமெடி நடிகர்.. என்னத்த கண்ணைய்யா எப்படி உயிர்விட்டார் தெரியுமா..?

40 ஆண்டு காலத்திற்கு மேலாக திரைத்துறையில் இருந்து அரை வயிற்றுப் சாப்பாட்டுக்காக ஏறாத கம்பெனியில் இல்லை. சினிமாவில் ஏதாவது தான் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு தினமும் ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கி வருவதையே கண்ணைய்யா ஒரு வாழ்க்கையாக கொண்டிருந்தார்.

அவருக்கு வைகைப்புயல் வடிவேலு மூலம் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதனை தொடர்ந்து பல வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது. ஆனாலும் இவர் சினிமாவில் நடிக்க முடிந்ததே ஒளிய எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்க முடியவில்லை.

 இவரின் குணச்சித்திரம் கலந்த நகைச்சுவை நடிப்பு அனைவருக்கும் பிடித்திருந்தது. அதுமட்டுமில்லாமல் இவர் பேசக்கூடிய டயலாக்குகள் எல்லாமே மக்களை மிக எளிதில் சென்றடைந்தது. அந்த அளவிற்கு இவர் பேசக்கூடிய அந்த வழக்கு மிகவும் சிறப்பாக இருந்தது.

 இவரின் மறக்கமுடியாத நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாக வைகை புயல் வடிவேலு காரில் ஏறும்போது அந்தக் காரின் ஓட்டுநராக கண்ணையா வருவார்.  இந்த கேரக்டரில் அவருக்கு கண் தெரியாது. கார் வருமா… என வடிவேலு கேட்டவுடன்  வரும்… ஆனா வராது … என்ற டயலாக் இன்று வரை யாராலும் மறக்கமுடியாத டயலாக் ஆக மக்களின் மத்தியில் உள்ளது.

இதில் மேலே ஒரு படி போய் என்னத்த கண்ணையா கண் தெரியாத நிலையில் வடிவேலை பார்த்து நீங்க என்ன எம்ஜிஆர் மாதிரி தகதகன்னு மின்னரீங்க என்ற டயலாக்கை பேசும்போது எழும் கை தட்டலுக்கு ஈடு இணை இல்லை. இன்றும் அந்த படத்தை பார்க்கும் போது இந்த டைலாக் மூலம் சிரித்து சிரித்து வயிறு தான் வலி எடுக்கும்.

அந்தளவுக்கு மக்களை சிரிக்க வைத்த எந்த கலைஞரின் இறப்பு மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக அமைந்துவிட்டது. எந்த ஒரு கவனிப்பும் இல்லாமல் வயது முதிர்வு காரணத்தினால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இவர் உயிரிழந்துவிட்டார்.

மேலும் இவர் ஒரு படத்தில் ஒரு டயலாக் சொல்லுவார் என்னத்த சொல்லி என்னத்த பண்ண… டயலாக் இவரின் வாழ்வுக்கு உண்மையாக அமைந்துவிட்டது. இதில் முதலில் வரும் “என்னத்த” என்ற வார்த்தையை தான் இவரது பெயருக்கு முன்னால் அடைமொழியாக கொடுத்தார்கள். எனவே தான் இவருக்கு என்னத்த கண்ணையா என்ற பெயர் ஏற்பட்டது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …