“தங்க மங்கையாய் முகம் ஜொலிக்க வேண்டுமா..!” – ஆவாரம்பூ ஒன்றே போதும்..!

தங்க பஸ்பம் என்று சித்தர்களால் குறிப்பிடப்பட்ட ஆவாரம் பூவில் எண்ணற்ற அழகியல் நன்மைகள் காணப்படுகிறது. இந்த பூவினை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முகத்திற்கு கோல்டன் பேஸ் பேக் தேவையில்லை.இதுவே உங்கள் முகத்திற்கு இயற்கையான தங்கத்தின் பொலிவை இது தந்துவிடும்.

கிராமப்புறங்களில் திறந்த வெளிகளில் அதிகளவு காணப்படும் இந்த ஆவாரம்பூ சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியது. தங்கச்சத்து அதிகம் நிரம்பியது. இன்று இருக்கும் பெண்கள் தங்களது அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு அதற்காக பணங்களை பல வழிகளில் செலவு செய்து வருகிறார்கள்.

செயற்கை வேதிப்பொருட்கள் கொண்ட இந்த அழகுப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் எண்ணற்ற பாதிப்புகள் உடலுக்கு ஏற்படுகிறது. அதனைத் தவிர்த்து நீங்கள் இயற்கையான பொருட்களைக் கொண்டு உங்கள் அழகை மெருகேற்ற ஆவாரம்பூ மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.

அப்படிப்பட்ட ஆவாரம் பூவை எப்படி நீங்கள் உங்க முக அழகுக்கு பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

காய்ந்த ஆவாரம் பூ அல்லது பச்சையாக இருக்கக்கூடிய ஆவாரம்பூ இதனை மஞ்சளோடு சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளுங்கள் பிறகு இதனோடு பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விடுங்கள்.

இந்த அரைத்த கலவையை நீங்கள் உங்கள் முகத்தில் சோப்பு போடுவதற்கு பதிலாக தினமும் தேய்த்து கழுவி வாருங்கள். இதன் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள், வடுக்கள், கருப்பு நிற புள்ளிகள், கருவளையங்கள், மருகு கழுத்தில் இருக்கும் கருமை போன்றவை எளிதில் நீங்கும்.

இந்தப் பொருட்கள் பிரஷான நிலையில் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் உலர்ந்த நிலையில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முக அழகு மேலும் மெருகேறும்.

மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இயற்கையாக உங்கள் முகத்தை மேலும் பளிச்சென்று மாற்றி அனைவரது மனதிலும் இடம் பிடிக்கலாம். அதுமட்டுமல்லாமல் உங்களின் இந்த முக மார்க்கத்திற்கு காரணம் என்ன என்பதை உங்களிடம் அவர்களை கேட்டு கூடிய நிலையும் ஏற்படும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …