” 5 நிமிஷம் தான் தக்காளி வச்சு முகத்தை .!” – வெள்ளையாக்கும் வித்தைய கத்துக்கோங்க..!!

இன்று பெரும்பான்மையாக இருக்கக்கூடிய அனைத்து நபர்களும்  முக அழகை மேம்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல் சிவப்பாக காட்சி அளிக்க வேண்டும் என்பதை விருப்பமாக கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் கட்டாயம் பியூட்டி பார்லருக்கு சென்று முகத்தை ஸ்க்ரப்பிங், பிரீச்சிங், பேசியல் போன்ற பல வகை நுணுக்கங்களை பயன்படுத்தி தங்கள் முக அழகை மேம்படுத்த முயற்சி செய்ய பெரும் பணத்தை செலவிடுவார்கள்.

அதற்காக நீங்கள் பியூட்டி பார்லர் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் வீட்டில் இருந்தே ஒரு தக்காளியை வைத்துக்கொண்டு ஐந்தே நிமிடத்தில் உங்க முகத்தை மிக அழகாக மாற்றி விட முடியும்.

இதற்கு ஒரு தக்காளியோடு சிறிதளவு மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் போதுமானது. இப்போது உங்கள் முகத்தை வெள்ளையாக கூடிய இந்த பொருட்களை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

👍 முதலில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ஒரு தக்காளியை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். இரண்டாக நறுக்கிய எந்த தக்காளியின் ஒரு பாகத்தை எடுத்து நடுவே கத்தியால் நன்கு கீரி விடவும்.

👍 அவ்வாறு நீங்கள் கீறும் போது அதில் இருக்கக்கூடிய நீர்ச்சத்து வெளிவரக்கூடிய தருணத்தில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை அதில் கலந்து கொண்டு அப்படியே உங்கள் முகத்தில் கிளாக் வைசாகவும், ஆன்டி கிளாக் வைசாகவும் நன்கு மசாஜ் செய்து தேய்த்து விடவும். நீங்கள் இவ்வாறு ஒரு பத்து நிமிடங்கள் தேய்த்து விட்ட பிறகு அப்படியே வைத்து விடுங்கள்.

👍 இதனை அடுத்து 10 நிமிடங்கள் சென்ற பிறகு மீதி இருக்கும் பாதி தக்காளியை எடுத்துக்கொண்டு அதை மீண்டும் கத்தியால் நன்கு கீறி விடவும். இப்போது அதில் நீர்ச்சத்து வெளிவரும் சமயத்தில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் எலுமிச்சை பழத்திலிருந்து அரை மூடி சாறினை இதில் ஊற்றி விட வேண்டும்.

👍 மேலும் எலுமிச்சை சாறு ஊற்றிய பிறகு நீங்கள் கால் டீஸ்பூன் அளவுக்கு சர்க்கரையை போட்டு விடுங்கள். இந்த சர்க்கரை உங்கள் முகத்திற்கு நல்ல ஸகர்பராக பயன்படுவதால் முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகளை அனைத்தும் வெளியே கொண்டு வந்து விடக்கூடிய திறனோடு இருக்கும்.

👍 இப்போது இந்த அரை தக்காளி எலுமிச்சை சாறு சர்க்கரை நிறைந்த கலவையை உங்கள் முகத்தில் மீண்டும் ஒரு பத்து நிமிடங்களுக்கு கிளாக் வைஸ் ஆகவும் ஆன்டி கிளாக் வைசாகவும் நன்கு மசாஜ் செய்து தேய்த்து விடுங்கள். இதனை அடுத்து ஒரு பத்து நிமிடம் அது ஊரும் வரை காத்திருக்கவும்.

👍 பத்து நிமிடம் கழிந்த பிறகு குளிர்ந்த நீரால் உங்கள் முகத்தை கழுவி பாருங்கள் நீங்களே ஆச்சரியப்பட கூடிய அளவிற்கு முகத்தில் இருந்த கருமையான திட்டுக்களும் கரும்புள்ளிகளும் லேசாக மறைந்திருக்கும். இந்த டெக்னிக்கை தொடர்ந்து நீங்கள் செய்வதின் மூலம் உங்கள் முக அழகு பளிச்சென்று மாறும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …