சமீப காலமாக இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பிரபலங்கள் யார்…? லிஸ்ட் உள்ளே…!

 பெண்ணின் கருமுட்டையுடன் ஆணின் விந்தணு இணைந்து உருவாவது சைக்கோர்ட் அதாவது கரு எனப்படும். கரு உருவான பின்பு அந்த கரு இரண்டாக பிளந்து அதில் உருவாகும் குழந்தைகள் ஒத்த இரட்டையர்கள் ஆகும்.

அதுவே பெண்ணின் இரு வேறு கருமுட்டைகள் விந்தணுக்களுடன் இணைந்து ஒரே கருத்தரிப்பில் இரட்டை குழந்தைகள் பிறப்பது மாறுபட்ட இரட்டையர்கள் ஆகும்.

சமீப காலமாக திரை பிரபலங்கள் அனைவருக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது என்பது ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழ் திரையுலைகள் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவரான நமிதா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர் தமிழில் எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பின்பு பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 1 என்னும் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றார். அதன் பின்பு 2017 வீரேந்திர சவுத்ரி என்பவரை நமீதா திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

இரட்டை குழந்தைகள் பெற்ற பிரபலங்களின் லிஸ்ட் இதோ…!

தெலுங்கு நடிகர் விஷ்ணு, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தெலுங்கு நடிகை உதய பானு, தமிழ் நடிகர் பரத், பாலிவுட் நடிகை சன்னி லியோன், பாலிவுட் நடிகர் கரண் ஜோஹர், பாலிவுட் நடிகை செலினா ஜெயிட்லி.

மேலும் தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ளனர் நயன்தாரா விக்னேஷ் தம்பதியினர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்து தனக்கென வெறும் ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள நடிகை நயன்தாரா. ரசிகர்களால் செல்லமாக லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையும் ஆவார்.

கடந்த ஜூனில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா தற்போது திருமணமாகி ஐந்து மாதங்கள் முடிந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக போட்டோக்களுடன் தனது சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.

இவ்வாறு சமீப காலமாக திரை பிரபலங்கள் அனைவரும் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுப்பது வழக்கமாக உள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …