விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ரசிகர்களுக்குப் பல பரிட்சியமான போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அந்த வகையில் சின்னதிரை மற்றும் வெள்ளித்திரையில் ஒரு கலக்கு கலந்து கொண்டார் பாத்திமா பாபு.
தூதர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இவர் அதையடுத்து ஜெயா டிவியில் பல ஆண்டுகளாகச் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். பின்பு ‘கல்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ் மட்டும் இன்றி பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதே போல் சின்னதிரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.இவர் தமிழில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஆனால் பெரிய அளவில் இவருக்கு ரசிகர்கள் கிடைக்கவில்லை இவரது சில ரசிகர்கள் இவருக்கு ஆர்மி ஒன்றை துவக்கினார்கள்.
இந்நிலையில், உலக புத்தக தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,உலகப் புத்தக தினமான இன்று எனக்கு இரண்டு தபாலில் வந்த மூன்று புத்தகங்கள் – அனுப்பியவர் பெயர் இல்லாமல் கிளப்ஹவுஸ்ல சிக்காம போயிடுவீங்க..? நான் YWCA ஹாஸ்டலில் திருமணத்திற்கு முன் தங்கி இருந்தபொழுது அனுப்பியவர் பெயர் இல்லாமல் மலர் கொத்துகள் வரும்.
அப்ப அனுபவிச்ச ஒரு குதுகுதுப்பு இப்பவும்.யாருங்க….. ஏன் இப்படி? எப்படியும் நானும் உங்களை நீங்க மாட்டேன் நீங்களும் அப்படியே (நான் story reading சிறுகதை நேரம் பத்தி சொன்னேன்)நானே கொஞ்ச கொஞ்சமா தப்பித் தேடி தருவேன்….ஆனாலும் குஷியா தான் இருக்கு…புதையலே கிடைச்ச மாதிரிஇனி உங்களை என்கிட்ட இருந்து யாராலும் காப்பாத்த முட்யாத்த் 😂😂..” என்று கூறியுள்ளார்.