வீட்டை குளிர்ச்சியாக வைக்க:அக்னி நட்சத்திர காலகட்டம் நெருங்கிவரக் கூடிய வேளையில் அனல் அடிக்கும் வெப்ப காற்று இந்த கோடையில் அதிக அளவு வீசும். அது மட்டுமல்லாமல் எந்த ஆண்டும் இல்லாத அளவு இந்த கோடையில் வெப்பம் அதிகமாக ஏற்படும் என்று வானிலை நிபுணர்களும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி? அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக உங்கள் வீட்டில் நீங்கள் அடர் நிறத்தில் தான் பெயிண்டை அடித்து இருப்பீர்கள். இதன் மூலம் கோடையில் உங்கள் வீட்டுக் உள்ளும் வெப்பம் அதிகரிக்கும். எனவே இனிமேல் உங்கள் வீட்டுக்கு இளம் நிற பெயிண்டுகளை அடிக்கும் போது கூடுதல் வெப்பம் ஏற்படாமல் குளிர்ச்சியாக இருக்கும்.
காலை ,மாலை என இரண்டு வேளைகளிலும் வீட்டைச் சுற்றி நீரை அடித்து விடுங்கள். இதன் மூலம் வெளியே இருக்கக்கூடிய வெப்ப தாக்குதல் உள்ளுக்குள் ஏற்படாமல் சற்று குறைவாக இருக்கும்.
keep home coolவீட்டுக்குள் வளர்க்கக்கூடிய செடிகளை நீங்கள் உங்கள் வீட்டுக்குள் வளர்க்கும் போது வீடு குளிர்ச்சியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் ஒரு ஏசி தரக்கூடிய குளிர்ச்சியை விட வீட்டுக்குள் இருக்கும் செடிகள் தரும் குளிர்ச்சி அலாதியானது உடலுக்கு ஆரோக்கியமானது.
மேலும் வாரத்துக்கு இரண்டு முறை உங்கள் வீட்டு தரைகளை நீங்கள் துடைத்து வந்தால் கோடை காலத்தில் தினமும் துடைப்பதின் மூலம் தரைகளில் இருக்கும் சூடு நீங்கி குளிர்ச்சியாக இருக்கும்.
keep home coolவெப்பத்தை அதிகளவு உமிழ கூடிய மின் சாதனங்களை அதிகளவு பயன்படுத்தாதீர்கள் முடிந்தவரை வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க எல்இடி விளக்குகளை பயன்படுத்துங்கள்.
வீட்டுக்குள் குளிர்ச்சியாக இருக்க காற்றோட்டத்தை அதிகப்படுத்த ஜன்னல்களை திறந்து வைத்து விடுங்கள் திரைச் சேலைகளையும் நீங்கள் இளம் நிறத்தில் போடும்போது உங்கள் கண்களுக்கு அது குளிர்ச்சியை ஏற்படுத்தும். மேற்கூறிய இந்த குறிப்புக்களை பயன்படுத்தி பாருங்கள் கட்டாயம் உங்கள் வீடு குளிர்ச்சியாக மாறிவிடும்.