என்னது நடிகை கௌதமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதா? அப்ப இனிமேல் அவங்க டாக்டர் கௌதமி…!

காந்திநகர் வெண்டவா வீதி என்ற தெலுங்கு படத்தில் 1987இல் கௌதமி அறிமுகப்படுத்தப்பட்டார். அடுத்து தமிழ் படமான குரு சிஷ்யன் படத்தில் ரஜினி பிரபுவுக்கு இணையாக நடித்த இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுக நாயகி ஆனார்.

 தென்னிந்திய மொழிகளில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகர்களோடு நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

 இதனை அடுத்து இவர் கல்யாணம் பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்ட பிறகு கணவனோடு ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர் பிரிந்து வாழ்ந்து வந்த வேளையில் கமலஹாசன் உடன் லிவ்விங் டுகதர் முறையில் வாழ்ந்ததாக பேச்சுக்கள் வெளிவந்தது.

எனினும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு கமலஹாசன் அடைக்கலம் கொடுத்தாரா அல்லது இவர்கள் இருவரும் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்தார்கள் என்பது இன்றுவரை புரியாதத புதிராக தான் உள்ளது.

இதனை அடுத்து மிகப்பெரிய பிரேக் எடுத்துக்கொண்ட இவர் கமல் நடித்த பாபநாசம் படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு ரீ என்ட்ரி கொடுத்தா.ர் அது மட்டுமல்லாமல் ஏராளமான சின்னத்திரை சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

 தற்போது தன் பெண்ணோடு தனித்து வாழ்ந்து வரும் இவர் துப்பறிவாளன் இரண்டு மற்றும் சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறா.ர் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டி வரும் இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். அதுமட்டுமல்லாமல் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராகவும் இவர் செயல்படுகிறார்.

 மேலும் புற்று நோயால் பாதிப்படைந்தவர்களை மீட்டெடுக்க ஒரு தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.இதனை அடுத்து கௌதமிக்கு மலேசியாவில் உள்ள ஏசியா மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரோக்கியம் மற்றும் சமூக சேவைக்கான கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது.

 இதனை அடுத்து கௌதமி பேசும்போது மலேசியாவின் ஆசிய மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரோக்கியம் மற்றும் சமூக சேவைக்கான கௌரவ டாக்டர் பட்டம் பெற்றது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அங்கீகாரம் எனது பணியை மீண்டும் அதிக அளவு தொடரவும் குறிப்பிட்ட இலக்கை அடையவும் எனக்கு உத்வேகம் அளித்துள்ளது என்றார்.

 மேலும் இந்த பயணத்தில் மக்களின் ஆதரவு தனக்கு வேண்டும் என்றும் இதுவரை தனக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …