சீரியல் நடிகையான காயத்ரி கிருஷ்ணன் ஆரம்ப காலகட்டத்தில் மாடலின் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர். மேலும் இவரை தொகுப்பாளினியாக மேடைகளில் அதிக அளவு நீங்கள் பார்த்திருக்கலாம்.
இவர் அண்மையில் பெண்களுக்கு எதிராக காலம் காலமாக பின்பற்றப்படும் மூடநம்பிக்கைகளை உடைத்து எறிய கூடிய வகையில் வெளி வந்த வெப் சீரியலில் மாசான டயலாக்கை பேசி பலர் மனதிலும் இடம் பிடித்து இருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது.
அந்த வகையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி என்ற கேரக்டர் ரோலை செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். மேலும் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் மகாலட்சுமியும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவை பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் விட்டார்கள். இந்த வீடியோவில் இவர் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து மிக ஓப்பனாக தனது கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்.
ஏற்கனவே இவர் பேட்டி ஒன்று தன்னுடைய சினிமா அனுபவங்கள் பற்றி சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்ததோடு மீடு பிரச்சனை குறித்து கேட்ட கேள்விக்கு சரியான பதிலடி தந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.
எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய குணம் கொண்ட இவர் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பல பேர் சினிமாவில் வாய்ப்பினை பெறுவதற்காக அப்படி செய்கிறார்கள். வேண்டாம் என்று நினைப்பவர்கள் அப்படியே விட்டு விடுகிறார்கள் என்று கூறி இருக்கிறார்.
இந்த பேச்சை ஊடகத்தில் வெளிப்படையாக பேசியிருப்பது தான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. யாருமே பேச தயங்க கூடிய வித விஷயத்தை இப்படி பச்சையாக கூறியிருப்பது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
இன்னும் உண்மையை கூறும் போது கசப்பாகத்தான் இருக்கும் என்ற பழமொழியை உறுதி செய்யக் கூடிய விதத்தில் இவரது பேச்சு உள்ளது. மேலும் படங்களில் நடிக்க வேண்டும் என்றால் கட்டாயம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்பதை சீரியல் நடிகை காயத்ரி கிருஷ்ணன் ஓபனாக தெரிவித்து இருக்கும் கருத்து பலரையும் திகைக்க வைத்துள்ளது.
எனவே சினிமாவில் நடிப்பதற்கு அழகும், திறமையும் இருந்தால் போதாது இது போன்று அட்ஜஸ்ட்மென்ட் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டால் அதை சமாளித்து அல்லது அதற்கு உடன்பட்டால் மட்டுமே என்று நட்சத்திரங்களாக ஜொலிக்க முடியும் என்ற நிலையை தோல் உரித்து காட்டி விட்டார்.