பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை காயத்ரி யுவராஜ். நடனத்தின் மீது தீராத பற்று கொண்டிருக்கும் இவர் நடன கலைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற திரைப்பட சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதற்கு முன்பாக தென்றல் என்ற சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
தொடர்ந்து பல சீரியல்களில் வில்லியாக நடித்திருக்கும் இவர் தற்போது இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார் அம்மணி.
இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் சேனல் என தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கும் இவர் ரசிகர்களிடம் நெருக்கமான ஒரு நடிகை என்று கூறலாம் தன்னுடைய வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் கேள்விக்கான வீடியோக்கள் ஆகியவற்றை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்திற்கு வருகிறார்.
இந்நிலையில் மொட்டை மாடியில் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.